🔗

இப்னுமாஜா: 3925

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ رَجُلَيْنِ مِنْ بَلِيٍّ قَدِمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا، فَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ، فَغَزَا الْمُجْتَهِدُ مِنْهُمَا فَاسْتُشْهِدَ، ثُمَّ مَكَثَ الْآخَرُ بَعْدَهُ سَنَةً، ثُمَّ تُوُفِّيَ، قَالَ طَلْحَةُ: فَرَأَيْتُ فِي الْمَنَامِ: بَيْنَا أَنَا عِنْدَ بَابِ الْجَنَّةِ، إِذَا أَنَا بِهِمَا، فَخَرَجَ خَارِجٌ مِنَ الْجَنَّةِ، فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ الْآخِرَ مِنْهُمَا، ثُمَّ خَرَجَ، فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ، ثُمَّ رَجَعَ إِلَيَّ، فَقَالَ: ارْجِعْ، فَإِنَّكَ لَمْ يَأْنِ لَكَ بَعْدُ، فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ، فَعَجِبُوا لِذَلِكَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثُوهُ الْحَدِيثَ، فَقَالَ: «مِنْ أَيِّ ذَلِكَ تَعْجَبُونَ؟» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ ‍ هَذَا كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا، ثُمَّ اسْتُشْهِدَ، وَدَخَلَ هَذَا الْآخِرُ الْجَنَّةَ قَبْلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ سَنَةً؟» قَالُوا: بَلَى، قَالَ: «وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَ، وَصَلَّى كَذَا وَكَذَا مِنْ سَجْدَةٍ فِي السَّنَةِ؟» قَالُوا: بَلَى، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»


3925. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ பலீ குலத்தைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களில் ஒருவர் மற்றவரை விட அதிக சிரத்தையுடன் வணக்கங்களில் ஈடுபட்டார். அதிக சிரத்தை எடுத்தவர் போரில் வீர மரணம் அடைந்தார். மற்றவர் ஒரு வருடம் கழித்து மரணமடைந்தார்.

மேலும் தல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு கனவு கண்டேன். சொர்க்கத்தின் வாசலில் நான் இருந்தேன். அவ்விருவரும் அங்கு இருந்தனர். சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து, இரண்டாவதாக இறந்தவரை உள்ளே செல்ல அனுமதித்தார். பின்னர் வெளியே வந்து, முதலில் ஷஹீதானவரை உள்ளே செல்ல அனுமதித்தார். பிறகு என்னிடம் திரும்பி வந்து, “திரும்புங்கள், உங்களுக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.

தல்ஹா (ரலி) காலையில் மக்களுக்கு அதைச் சொன்னார். மக்கள் ஆச்சரியப்பட்டனர். விஷயம் நபி (ஸல்) அவர்களை அடைந்தது. மக்களும் அதை நபி (ஸல்) அவர்களிடம் (ஆச்சரியமாகக்) கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “எதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்தான் இருவரில் அதிக சிரத்தையுடன் வணங்கியவர். பின் ஷஹீதானார். ஆனால் மற்றவர் இவருக்கு முன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என்றனர்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “ரமளானை அடைந்து நோன்பு நோற்கவில்லையா? அந்த வருடத்தில் இத்தனை ஸஜ்தாக்கள் தொழவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “(அதனால் தான்) அவர்களுக்குள் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட அதிக தூரம் வித்தியாசம் உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)