مَنْ قَرَأَ {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1] كُلَّ لَيْلَةٍ مَنَعَهُ اللهُ بِهَا مِنْ عَذَابِ الْقَبْرِ، وَكُنَّا فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُسَمِّيهَا الْمَانِعَةَ، وَإِنَّهَا فِي كِتَابِ اللهِ سُورَةٌ مَنْ قَرَأَ بِهَا فِي كُلِّ لَيْلَةٍ فَقَدْ أَكْثَرَ وَأَطَابَ
10479. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யார் ஒவ்வொரு இரவிலும் “தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” எனும் (67 ஆவது) அத்தியாயத்தை ஓதி வருகிறாரோ அவரை கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் தடுப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் இந்த அத்தியாயத்திற்கு “தடுக்க கூடியது” என்று நாங்கள் பெயர் கூறினோம்.
இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு அத்தியாயமாகும். இதை ஒவ்வொரு இரவிலும் ஓதக்கூடியவர் அதிகமான நன்மைகளை செய்தவர் ஆவார்.