«إِنَّ الْعَشْرَ عَشْرُ الْأَضْحَى، وَالْوَتْرَ يَوْمُ عَرَفَةَ، وَالشَّفْعَ يَوْمُ النَّحْرِ»
14511. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1-3) என்ற வசனத்தில் உள்ள) பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களாகும்; ஒற்றை என்பது (துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாவது நாளான)அரஃபா நாளாகும்; இரட்டை என்பது (துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளான) நஹ்ருடைய நாளாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)