🔗

முஸ்னது அஹ்மத்: 2165

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْمَنَامِ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ مَعَهُ قَارُورَةٌ فِيهَا دَمٌ يَلْتَقِطُهُ أَوْ يَتَتَبَّعُ فِيهَا شَيْئًا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ قَالَ: دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَتَتَبَّعُهُ مُنْذُ الْيَوْمَ “

قَالَ عَمَّارٌ: «فَحَفِظْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدْنَاهُ قُتِلَ ذَلِكَ الْيَوْمَ»


2165. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தலைவிரிகோலமாகவும், புழுதி படிந்தவராகவும், இரத்தம் நிறைந்த ஒரு குப்பியுடனும் (தரையில் சிந்திய இரத்தத்தை) சேகரித்துக் கொண்டிருந்தவாறு நபி (ஸல்) அவர்களை ஒரு நண்பகலில் நான் கனவில் பார்த்தேன்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இது ஹுஸைன் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் இரத்தம். இன்று முதல் நான் இதைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் பின் அபூஅம்மார் (ரஹ்)


அம்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்:

நாங்கள் அந்த நாளை நினைவில் வைத்திருந்தோம். அந்த நாளில்தான் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.