«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»
فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ وَقَالَ: نَعَمْ
467. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இஸ்ஹாக் இமாம் கூறுகிறார்:
நான், அபூஉஸாமா (என்ற ஹம்மாத் பின் உஸாமா) அவர்களிடம் மேற்கண்ட செய்தியை இத்ரீஸ் பின் யஸீத் உங்களுக்கு அறிவித்தாரா? என்று கேட்டேன். அதற்கவர், “ஆம்” என்று பதில் கூறி ஏற்றுக்கொண்டார்.