أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَ، وَكَانَ جَلِيسًا لَهُمْ، وَكَانَ أَبْيَضَ اللِّحْيَةِ وَالرَّأْسِ قَالَ: فَغَدَا عَلَيْهِمْ ذَاتَ يَوْمٍ وَقَدْ حَمَّرَهُمَا، قَالَ: فَقَالَ لَهُ الْقَوْمُ: هَذَا أَحْسَنُ، فَقَالَ: إِنَّ أُمِّي عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَرْسَلَتْ إِلَيَّ الْبَارِحَةَ جَارِيَتَهَا نُخَيْلَةَ، فَأَقْسَمَتْ عَلَيَّ لأَصْبُغَنَّ، وَأَخْبَرَتْنِي أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَانَ يَصْبُغُ.
பாடம்: 45
(நரை) முடிக்கு சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.
2733. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்) அவர்கள் எங்களின் தோழராக இருந்தார். அவரின் தாடிமுடியும், தலைமுடியும் வெண்மையாக இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களிடம் வந்தபோது தாடிமுடிக்கும், தலைமுடிக்கும் சிகப்பு நிற சாயமிட்டுருந்தார். அப்போது மக்கள் இது மிக அழகாக உள்ளதே என்று கூறினர்.
அதற்கு அவர் கூறியதாவது:
எனது தாயாரும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்கள் தனது நுகைலா எனும் அடிமைப் பெண்ணை நேற்றிரவு என்னிடம் அனுப்பி நான் முடிக்கு சாயமிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
மேலும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (இவ்வாறு) சாயமிடுவார்கள் என்றும் எனக்கு அறிவித்தார்கள்.