«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا لَمْ تَمَسَّهُ النَّارُ»،
1817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, நரகம் தீண்டாது.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
அபூஅப்துர்ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் தவறாகும். ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து மர்வான் அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடரே உண்மையானதாகும்.