🔗

shuabul-iman-7379: 7379

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

” مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ نِسَائِكُمْ فَلَا يَدْخُلْنَ الْحَمَّامَ “

قَالَ: فَنَمَيْتُ ذَلِكَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي خِلَافَتِهِ، فَكَتَبَ إِلَى أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ: أَنْ سَلْ مُحَمَّدَ بْنَ ثَابِتٍ عَنْ حَدِيثِهِ فَإِنَّهُ رِضًا، فَسَأَلَهُ ثُمَّ كَتَبَ إِلَى عُمَرَ فَمَنَعَ عُمَرُ النِّسَاءَ مِنَ الْحَمَّامِ،


7379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் தன் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் கீழாடையின்றி (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


(அறிவிப்பாளர்) கூறுகிறார்: …

நான் இந்தச் செய்தியை உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சி காலத்தில் (அவர்களுக்குத்) தெரியப்படுத்தினேன். அப்போது அவர்கள், அபூபக்ர் பின் அம்ர் பின் ஹஸ்ம் அவர்களுக்கு, “முஹம்மது பின் ஸாபித் அவர்களிடம் அவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பற்றி கேளுங்கள். ஏனெனில் அவர் திருப்திக்குரியவர்,” என்று எழுதினார்கள். அவர், அவரை விசாரித்து உமர் (ரஹ்) அவர்களுக்கு எழுதினார். அதன் பிறகு, உமர் (ரஹ்) அவர்கள் பெண்கள் (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைவதற்கு தடை விதித்தார்கள்.


பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட வார்த்தை அமைப்பு யஃகூப் பின் ஸுஃப்யான் அவர்கள் (அறிவித்த) ஹதீஸின் வார்த்தைகளாகும்.

யஹ்யா பின் மயீன் அவர்கள், ‘அவர் இப்னு ஹுனைன்’ என்று கூறவில்லை. மேலும், விருந்தினரை உபசரிப்பது பற்றியும் அவர் குறிப்பிடவில்லை.

இங்குக் குறிப்பிடப்படும் அப்துல்லாஹ் என்பவர் அல்கத்மீ கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆக இருப்பின், அவரது தந்தையின் பெயர் யஸீத் ஆகும்.

ஆயினும், இப்னு ஸுவைத் உடைய நூலில், இவர்கள் இருவர் (யஃகூப் மற்றும் யஹ்யா) வழியாகவும் (இந்த அறிவிப்பு) இருந்தது.

எங்களது ஆசிரியர் அபூஅப்துல்லாஹ் அல்ஹாஃபிழ்-ஹாகிம் இமாம் அவர்கள் இதனை உமர் பின் அப்துல்அஸீஸ் வழியாக அறிவித்துள்ளார். யஹ்யா பின் அய்யூப் வழியாக அவர், அபூயூஸுஃப்-யஃகூப் பின் இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று கூறியதாக அறிவித்தார்.

இவ்வாறே ஹாகிம் அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் வழியாக லைஸ் பின் ஸஃத் —> யஃகூப் பின் இப்ராஹீம் —> அப்துர்ரஹ்மான் பின் ஹிம்யர் —> முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரஹ்பீல் —> அப்துல்லாஹ் பின் யஸீத் … என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.