🔗

shuabul-iman-8386: 8386

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

يَا أَنَسُ، إِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَإِذَا تَوَضَّأْتَ فَأَسْبِغْ وُضُوءَكَ يَطُلْ عُمُرُكَ، وَمَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي فَسَلِّمْ عَلَيْهِمْ تَكْثُرْ حَسَنَاتُكَ، وَلَا تَبِيتَنَّ إِلَّا عَلَى وَضُوءٍ تَرَاكَ الْحَفَظَةُ وَأَنْتَ طَاهِرٌ، وَصَلِّ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَصَلِّ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ، وَوَقِّرِ الْكَبِيرَ، وَارْحَمِ الصَّغِيرَ “


8386. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக் கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும்.

நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாகும்.

மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

இரவில் உளூவுடனே இரு. அப்போது தான் பாதுகாக்கும் வானவர்கள் உன்னை தூய்மையாகக் காண்பார்கள்.

இரவிலும், பகலிலும் தொழு. லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன்சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.

பெரியோர்களை மதித்து நடந்துக் கொள். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)