«الرَّاكِبُ خَلْفَ الجَنَازَةِ، وَالمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
1031. “வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இந்தச் செய்தியை ஸயீத் பின் உபைதுல்லாஹ் அவர்களிடமிருந்து இஸ்ராயீலும் மற்றவர்களும் அறிவித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் சிலர் இதன் அடிப்படையில் அமல்படுத்தியுள்ளனர். அவர்கள் கூறுகிறார்கள்: ‘குழந்தை பிறந்து அழவில்லை என்றாலும், அது உருவாக்கப்பட்டது (உயிர் பெற்றது) என அறிந்தால், அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும். மேலும் இதுவே அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.