«إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ، لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»
பாடம்:
ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை.
2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை.
எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை, அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.
அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அலீ பின் மதீனீ அவர்கள், அந்தக் கூட்டத்தினர் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆவார்கள் என்று கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்.
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.