🔗

திர்மிதி: 283

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

قُلْنَا لِابْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى القَدَمَيْنِ، قَالَ: «هِيَ السُّنَّةُ»، فَقُلْنَا: إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ، قَالَ: «بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»،


பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வதற்கு அனுமதி.

283. தாஊஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் இரு ஸஜ்தாக்களுக்கிடையில்) குதிகால்களின் மீது குந்தி அமர்வதைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘அது நபிவழியாகும்’ என்று கூறினார்கள். நாங்கள், ‘அது ஒரு மனிதனுக்கு (சிரமமான அல்லது) கடினமானதாக நாங்கள் கருதுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு அவர்கள், ‘மாறாக, அது உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறினார்கள்.