🔗

திர்மிதி: 3451

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الهِلَالَ قَالَ: «اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ»


பாடம்:

பிறையைக் காணும்போது கூறவேண்டிய துஆ.

3451. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிறையைக் கண்டால் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள்:

அல்லாஹும்ம அஹ்லில்ஹு அலைனா பில்யும்னி, வல்ஈமானி, வஸ்ஸலாமதி, வல்இஸ்லாம், ரப்பீ வ ரப்புகல்லாஹ்.

(பொருள்: அல்லாஹ்வே! இப்பிறையை எங்கள் மீது அபிவிருத்தியுடனும், ஈமானுடனும், சாந்தியுடனும், இஸ்லாத்துடனும் உதயமாகச் செய்வாயாக! (பிறையே!) எனக்கும் உனக்கும் ரட்சகன் அல்லாஹ்வே ஆவான்.)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன் ஃகரீப்” எனும் (ஓரளவு சுமாரான, தனித்து அறிவிக்கப்படும்) வகையைச் சேர்ந்ததாகும்.