🔗

திர்மிதி: 3503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَمِعَنِي أَبِي، وَأَنَا أَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالكَسَلِ وَعَذَابِ القَبْرِ». قَالَ: يَا بُنَيَّ مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ قُلْتُ: سَمِعْتُكَ تَقُولُهُنَّ، قَالَ: الزَمْهُنَّ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُنَّ.


3503.

நான், “இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் கவலை, சோம்பல் மற்றும் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று சொல்வதை என் தந்தை கேட்டார். அவர் என்னிடம், “மகனே! இதை நீ யாரிடமிருந்து கேட்டாய்?” என்று கேட்டார். நான், “உங்களைச் சொல்லக் கேட்டேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர், “அப்படியானால், எப்போதும் இதைச் சொல்லிக்கொண்டிரு. ஏனெனில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்.