🔗

திர்மிதி: 419

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا صَلَاةَ بَعْدَ الفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ»،


பாடம்:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகை இல்லை என்பது குறித்த வந்துள்ளவை.

419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு இரண்டு ஸஜ்தாக்களைத் தவிர வேறு இல்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஹஃப்ஸா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு உமர் (ரலி) அவர்களின் இந்தச் செய்தி “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை குதாமா பின் மூஸா என்பவர் வழியாகவே நாம் அறிகிறோம். இதை இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் கருத்தை அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு, ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகைகளைத் தொழுவதை அவர்கள் வெறுக்கின்றனர்.

இந்தச் செய்தியின் (சரியான) கருத்து: “ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகை இல்லை” என்பதாகும்.