தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4479

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

மேலும், (அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பன வற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்து விடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்குவோம் என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள் (எனும் 2:58ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ரஃகதன் (தாரளமாக) எனும் சொல்லுக்கு விசாலமாகவும் அதிகமாகவும் என்று பொருள்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ‘ஹித்தத்துன்’ (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள்’ (திருக்குர்ஆன் 02:58) என்று கூறப்பட்டது.

ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, ‘ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து)’ என்று (பரிகாசமாகச்) கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 65

(புகாரி: 4479)

بَابُ {وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ القَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا البَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ [ص:19] وَسَنَزِيدُ المُحْسِنِينَ} [البقرة: 58]

رَغَدًا: وَاسِعٌ كَثِيرٌ

حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ ابْنِ المُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ} [البقرة: 58]. فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، فَبَدَّلُوا، وَقَالُوا: حِطَّةٌ، حَبَّةٌ فِي شَعَرَةٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.