Category: நஸாயி

Nasaayi-2116

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2116. ஹுஸைன் பின் ஹாரிஸ் அல்ஜதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் (ரஹ்) அவர்கள் (பிறை தேடும்) சந்தேகத்திற்குரிய நாளில் மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் கேட்டேன். அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறையைக் கண்டதும் நோன்பு வையுங்கள். பிறையைக் கண்டதும் நோன்பை விடுங்கள். அதனடிப்படையில் குர்பானி வணக்கத்தை நிறைவேற்றுங்கள்.

உங்களுக்கு மேகம் மறைத்தால், முப்பது நாட்களாக (மாதத்தை) முழுமையாக்குங்கள்.

இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.


أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»


Nasaayi-2107

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2107. அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது ரமளான் மாதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உத்பா (ரலி) அவர்கள், “நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “ரமளான் மாதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று சொன்னோம்.

அப்போது அவர்கள், “ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

மேலும் ஒவ்வொரு இரவும் ஒரு அறிவிப்பாளர், ‘நன்மையைத் தேடுபவரே! முன்னோக்கி வாருங்கள். தீமையைத் தேடுபவரே! விலகி இருங்கள்’ என்று அறிவிப்புச் செய்கிறார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அபூஅப்துர்ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி (இவ்வாறு உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்கள் நபியிடமிருந்து கேட்டதாக வந்திருப்பது) தவறாகும்.


عُدْنَا عُتْبَةَ بْنَ فَرْقَدٍ، فَتَذَاكَرْنَا شَهْرَ رَمَضَانَ، فَقَالَ: مَا تَذْكُرُونَ؟ قُلْنَا: شَهْرَ رَمَضَانَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” تُفْتَحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَتُغَلُّ فِيهِ الشَّيَاطِينُ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا بَاغِيَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ


Nasaayi-2598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவர் யாசகம் கேட்பது.

2598. (நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்கச் சென்றோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். (இதை அறிவிப்பவர்களில் ஒருவரான முஹம்மத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர்கள்மீது சுழலவிட்டார்கள்” என்று கூறினார்கள்.) அவர்கள் இருவரும் பலமானவர்களாக இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் விரும்பினால் (தர்மத்தைப் பெற்றுக் கொள்ளலாம்). ஆனால், தர்மத்தில் பணக்காரனுக்கோ அல்லது உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவனுக்கோ பங்கில்லை.


أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا: أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ؟ فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ، – وَقَالَ مُحَمَّدٌ: بَصَرَهُ – فَرَآهُمَا جَلْدَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»


Nasaayi-519

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

519.


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ فَقَالَ: «أَقِمْ مَعَنَا هَذَيْنِ الْيَوْمَيْنِ»، فَأَمَرَ بِلَالًا فَأَقَامَ عِنْدَ الْفَجْرِ، فَصَلَّى الْفَجْرَ، ثُمَّ أَمَرَهُ حِينَ زَالَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَمَرَهُ حِينَ رَأَى الشَّمْسَ بَيْضَاءَ فَأَقَامَ الْعَصْرَ، ثُمَّ أَمَرَهُ حِينَ وَقَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَقَامَ الْمَغْرِبَ، ثُمَّ أَمَرَهُ حِينَ غَابَ الشَّفَقُ فَأَقَامَ الْعِشَاءَ، ثُمَّ أَمَرَهُ مِنَ الْغَدِ فَنَوَّرَ بِالْفَجْرِ، ثُمَّ أَبْرَدَ بِالظُّهْرِ وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ، ثُمَّ صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ وَأَخَّرَ عَنْ ذَلِكَ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ فَصَلَّاهَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ وَقْتُ صَلَاتِكُمْ مَا بَيْنَ مَا رَأَيْتُمْ»


Nasaayi-544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

544. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஃபஜ்ர் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். மறுநாள் காலையில் நாங்கள் எழுந்தபோது, ஃபஜ்ர் நேரம் வந்ததும், இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். (நாங்கள் தொழுதோம்.)

பின்னர் அடுத்த நாள் காலையில், வெளிச்சம் நன்றாகப் பரவிய பின்பு இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரத்தைக் கேட்டவர் எங்கே? என்று கேட்டுவிட்டு, “இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்டதே (ஃபஜ்ர் தொழுகையின்) நேரம்” என்று கூறினார்கள்.


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الْغَدَاةِ، فَلَمَّا أَصْبَحْنَا مِنَ الْغَدِ أَمَرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ أَنْ تُقَامَ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَسْفَرَ، ثُمَّ أَمَرَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»


Nasaayi-1985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1985. உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார். மற்றொருவர் சில நாட்கள் கழித்து (இயற்கையாக) மரணமடைந்தார். நாங்கள் (இரண்டாவதாக) இறந்தவரை அடக்கம் செய்த பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.

நாங்கள், “அவருக்காக துஆ செய்தோம். ‘இறைவா! அவரை மன்னித்து அவரது தோழருடன் சேர்ப்பாயாக!’ என்று கூறினோம்” என்றோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரது தொழுகைக்கும் இவரது தொழுகைக்கும், அவரது செயலுக்கும் இவரது செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நிச்சயமாக, அவர்களுக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் போன்ற வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இதை எனக்கு அறிவித்த நபித்தோழர் (மற்றொரு நபித்தோழரிடமிருந்து) நபியின் சொல்லாக அறிவிப்பளர்தொடரைக் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ رَجُلَيْنِ، فَقُتِلَ أَحَدُهُمَا وَمَاتَ الْآخَرُ بَعْدَهُ، فَصَلَّيْنَا عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» قَالُوا: دَعَوْنَا لَهُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، اللَّهُمَّ أَلْحِقْهُ بِصَاحِبِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ؟ وَأَيْنَ عَمَلُهُ بَعْدَ عَمَلِهِ؟ فَلَمَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
قَالَ عَمْرُو بْنُ مَيْمُونٍ: أَعْجَبَنِي لِأَنَّهُ أَسْنَدَ لِي


Nasaayi-5319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5319.


«خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ»


Nasaayi-5084

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5084.


«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتُهُ قَدْ لَطَخَ لِحْيَتَهُ بِالصُّفْرَةِ»


Nasaayi-5083

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5083.


«أَتَيْتُ أَنَا وَأَبِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ قَدْ لَطَخَ لِحْيَتَهُ بِالْحِنَّاءِ»


Nasaayi-4832

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4832.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي فَقَالَ: «مَنْ هَذَا مَعَكَ؟» قَالَ: ابْنِي، أَشْهَدُ بِهِ، قَالَ: «أَمَا إِنَّكَ لَا تَجْنِي عَلَيْهِ، وَلَا يَجْنِي عَلَيْكَ»


Next Page »