ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
பாடம்:
காலை, மாலை பிரார்த்தனைகளில் மற்றொரு வகை.
10330. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், “நான் உனக்கு உபதேசிக்கும் இந்த வார்த்தைகளைச் செவியேற்பதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? நீ காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படிக் கூறு:
‘யா ஹய்யு யா கய்யூம், பிரஹ்மதிக அஸ்தஃகீஸ், அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹ், வலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத ஐன்’
(பொருள்: உயிருள்ளவனே! நிலைத்திருப்பவனே! உனது அருளைக் கொண்டு நான் உதவி தேடுகிறேன். எனது அனைத்து காரியங்களையும் நீ சீர்படுத்துவாயாக! கண்ணிமைக்கும் நேரம்கூட என்னை என் வசம் விட்டுவிடாதே!)
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: ” مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ، أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَإِذَا أَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ “
சமீப விமர்சனங்கள்