Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2160

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

திருமணம் குறித்து வந்துள்ள மற்ற பொதுவானவை.

2160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அல்லது ஒரு அடிமையை வாங்கினால், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வமின் ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி” என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு இதே போன்று கூறவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அபூஸயீத் (அப்துல்லாஹ் பின் ஸயீத்) அவர்கள், மணப்பெண், அடிமை விசயத்தில், “பிறகு நெற்றி முடியை பிடித்து அருள்வளம் பெறுவதற்காக துஆ செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூடுதலாக அறிவித்துள்ளார்.


«إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ».


Abu-Dawood-2355

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

எதை சாப்பிட்டு நோன்பு துறக்க வேண்டும்?

2355. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நோன்பாளியாக இருந்தால் பேரீச்சம்பழத்தால் நோன்பு துறங்கள்! பேரீச்சம்பழம் கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறங்கள்!. ஏனெனில் அது நன்கு தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)


«إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا، فَلْيُفْطِرْ عَلَى التَّمْرِ، فَإِنْ لَمْ يَجِدِ التَّمْرَ، فَعَلَى الْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ»


Abu-Dawood-2356

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2356.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ، فَعَلَى تَمَرَاتٍ، فَإِنْ لَمْ تَكُنْ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ»


Abu-Dawood-4972

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒருவர், மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற வார்த்தையை கூறுவது பற்றி வந்துள்ளவை.

4972. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸஅமூ – மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற வார்த்தை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை நீங்கள் செவியேற்றதுண்டா? என அபூமஸ்வூத் அவர்கள், அபூஅப்தில்லாஹ் அவர்களிடம்; அல்லது அபூஅப்தில்லாஹ் அவர்கள், அபூமஸ்வூத் அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கவர்கள், ஸஅமூ – மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற உறுதியற்ற வார்த்தை(யை ஒருவர் கூறுவது அவரது) தீய சவாரியாகும் (நடைமுறையாகும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று பதில் கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இதில், அபூஅப்தில்லாஹ் என்ற குறிப்புப் பெயர் கொண்டவர் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் ஆவார்கள்.


قَالَ أَبُو مَسْعُودٍ لِأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ لِأَبِي مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فِي «زَعَمُوا؟» قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا»


Abu-Dawood-3852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உணவு சாப்பிட்ட பின் கை கழுவுதல்.

3852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உணவு உண்ட) கையில் கொழுப்பு இருக்கும் நிலையில் ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Abu-Dawood-4287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4287.


«تِسْعَ سِنِينَ» قَالَ أَبُو دَاوُدَ: ” وَقَالَ غَيْرُ مُعَاذٍ، عَنْ هِشَامٍ: «تِسْعَ سِنِينَ».


Abu-Dawood-4286

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4286. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு ஆட்சியாளர் மரணித்து கருத்துவேறுபாடு ஏற்படும். அப்போது மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் (மஹ்தீ என்பவர்) மக்காவுக்கு வெருண்டோடுவார். மக்காவாசிகளில் சிலர் அவர் விரும்பாத நிலையிலும் அவரை கஅபாவிற்கு இழுத்துக் கொண்டுவந்து ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.

இவருக்கு எதிராக சிரியாவிலிருந்து ஒரு படை அனுப்பப்படும். என்றாலும் அது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள சமவெளியில் புதையுண்டுபோய்விடும். இதை மக்கள் கண்டபிறகு சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள நல்ல மனிதர்களும் ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.

பிறகு குறைஷிக் குலத்திலிருந்து ஒருவர் அவருக்கு எதிராக கிளம்புவார். அவரின் தாய்வழி மாமன்கள் கல்ப் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (அவருக்கு உதவியாக கல்ப் கூட்டத்தாரைச் சேர்ந்த அவரின் தாய்வழி மாமன்கள் இருப்பார்கள்). இவர் மஹ்தீ என்பவருக்கு எதிராக (கல்ப் கூட்டத்தாரின்) படையை அனுப்புவார். இந்தக் கல்ப் கூட்டத்தாரின் படையை மஹ்தீ தோல்வியுறச் செய்து அவர்களின் சொத்துக்களை போர்ச் செல்வங்களாக பெறுவார். அவற்றை மக்களுக்கு பங்கிடுவார். அந்தப் பங்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் நட்டவாளிகளே!.

பிறகு,

«يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ، فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلَى مَكَّةَ، فَيَأْتِيهِ نَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ فَيُخْرِجُونَهُ وَهُوَ كَارِهٌ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، وَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ مِنْ أَهْلِ الشَّامِ، فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ، وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ، فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا، فَيَظْهَرُونَ عَلَيْهِمْ، وَذَلِكَ بَعْثُ كَلْبٍ، وَالْخَيْبَةُ لِمَنْ لَمْ يَشْهَدْ غَنِيمَةَ كَلْبٍ، فَيَقْسِمُ الْمَالَ، وَيَعْمَلُ فِي النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُلْقِي الْإِسْلَامُ بِجِرَانِهِ فِي الْأَرْضِ، فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ، ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ»

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ بَعْضُهُمْ عَنْ هِشَامٍ: «تِسْعَ سِنِينَ»، وَقَالَ بَعْضُهُمْ: «سَبْعَ سِنِينَ»


Abu-Dawood-5000

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5000.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ: «ادْخُلْ» فَقُلْتُ: أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «كُلُّكَ» فَدَخَلْتُ


Abu-Dawood-2483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


«سَيَصِيرُ الْأَمْرُ إِلَى أَنْ تَكُونُوا جُنُودًا مُجَنَّدَةً جُنْدٌ بِالشَّامِ، وَجُنْدٌ بِالْيَمَنِ، وَجُنْدٌ بِالْعِرَاقِ»، قَالَ ابْنُ حَوَالَةَ: خِرْ لِي يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُ ذَلِكَ، فَقَالَ: «عَلَيْكَ بِالشَّامِ، فَإِنَّهَا خِيرَةُ اللَّهِ مِنْ أَرْضِهِ، يَجْتَبِي إِلَيْهَا خِيرَتَهُ مِنْ عِبَادِهِ، فَأَمَّا إِنْ أَبَيْتُمْ، فَعَلَيْكُمْ بِيَمَنِكُمْ، وَاسْقُوا مِنْ غُدُرِكُمْ، فَإِنَّ اللَّهَ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»


Next Page »