1278. இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமையான யஸார் அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு நான் (நஃபிலான தொழுகையை) தொழுதுகொண்டிருப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் பார்த்தார்கள்.
அப்போது அவர்கள், “யஸாரே! நாங்கள் (ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு நஃபிலான) இந்தத் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் தெரிவிக்கட்டும்; ஃபஜ்ர் (நேரம் வந்தப்) பிறகு (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு எந்தத் தொழுகையையும் தொழ வேண்டாம்” என்று கூறியதாக சொன்னார்கள்.
رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي، بَعْدَ طُلُوعِ الْفَجْرِ، فَقَالَ: يَا يَسَارُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ، فَقَالَ: «لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ، لَا تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ»
சமீப விமர்சனங்கள்