Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2535

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(அல்லாஹ்விடத்தில்) நற்கூலியையும், போர்ச் செல்வங்களையும் பெறுவதற்காக போரிடக்கூடியவர் (பற்றி வந்துள்ளவை).

2535. அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் என்னிடம் தங்கினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை (ஃகனீமத் எனும்) போர்ச் செல்வங்களை பெறுவதற்காக கால்நடையாக நபி (ஸல்) எங்களை அனுப்பினார்கள். அப்போது நாங்கள் எந்த ஒன்றையும் பெறாமல் திரும்பினோம். முயற்சியின் களைப்பை எங்கள் முகங்களில் அறிந்து கொண்டு எங்களிடம் வந்து நின்று, “இறைவா! இவர்களை என் பொறுப்பில் விட்டு விடாதே! நான் அவர்கள் மீது பலவீனமானவன். அவர்களை அவர்கள் பொறுப்பிலேயும் விட்டுவிடாதே! அவர்களால் அதற்கு சக்திபெற மாட்டார்கள்! அவர்களை மனிதர்கள் பொறுப்பில் விட்டு விடாதே! அவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்! என்று கூறினார்கள்!

பிறகு என்னுடைய தலை மேல் (அல்லது தலையின் நடுவில்) கை வைத்து, “ஹவாலாவின் மகனே! முகத்தஸ் பூமியில் கிலாஃபத் ஆட்சி வருவதை நீ பார்க்கும் போது நிலநடுக்கமும், மக்களின் கூச்சலும், இன்னும் மிகப்பெரும் நிகழ்வுகளும் ஏற்படும்! என் கை உன் தலை மேல் உள்ளதைப் போல மறுமை நாள் மக்களுக்கு நெருங்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூதாவூத் இமாம்

نَزَلَ عَلَيَّ عَبْدُ اللَّهِ بْنُ حَوَالَةَ الْأَزْدِيُّ، فَقَالَ لِي: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَغْنَمَ عَلَى أَقْدَامِنَا فَرَجَعْنَا، فَلَمْ نَغْنَمْ شَيْئًا، وَعَرَفَ الْجَهْدَ فِي وُجُوهِنَا فَقَامَ فِينَا، فَقَالَ: «اللَّهُمَّ لَا تَكِلْهُمْ إِلَيَّ، فَأَضْعُفَ عَنْهُمْ، وَلَا تَكِلْهُمْ إِلَى أَنْفُسِهِمْ فَيَعْجِزُوا عَنْهَا، وَلَا تَكِلْهُمْ إِلَى النَّاسِ فَيَسْتَأْثِرُوا عَلَيْهِمْ» ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي، أَوْ قَالَ: عَلَى هَامَتِي، ثُمَّ قَالَ: «يَا ابْنَ حَوَالَةَ، إِذَا رَأَيْتَ الْخِلَافَةَ قَدْ نَزَلَتْ أَرْضَ الْمُقَدَّسَةِ فَقَدْ دَنَتِ الزَّلَازِلُ وَالْبَلَابِلُ وَالْأُمُورُ الْعِظَامُ، وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِهِ مِنْ رَأْسِكَ»،


Abu-Dawood-859

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

859. ஏழு அறிவிப்புகளில் ஐந்தாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“(தொழுகைக்கு) நீ நின்றால் கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறி பின்பு ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தையும், மேலும், நீ எதை ஓத அல்லாஹ் நாடுவானோ அதையும் (துணை அத்தியாயத்தையும்) ஓது. நீ ருகூஉ செய்தால் உனது முழங்காலின் மீது உனது உள்ளங்கையை வைத்து உனது முதுகை நேராக நிமிர்த்தி வை. நீ ஸஜ்தா செய்தால் (நெற்றியைப் பூமியில் பதித்து) உறுதியாக ஸஜ்தா செய்.

(ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தினால் உனது (வலதுகாலை நட்டுவைத்து) இடது தொடையின் மீது அமர்ந்து கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)

 


«إِذَا قُمْتَ فَتَوَجَّهْتَ إِلَى الْقِبْلَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، وَبِمَا شَاءَ اللَّهُ أَنْ تَقْرَأَ، وَإِذَا رَكَعْتَ فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ، وَامْدُدْ ظَهْرَكَ»، وَقَالَ: «إِذَا سَجَدْتَ فَمَكِّنْ لِسُجُودِكَ، فَإِذَا رَفَعْتَ فَاقْعُدْ عَلَى فَخِذِكَ الْيُسْرَى»


Abu-Dawood-860

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

860. ஏழு அறிவிப்புகளில் ஆறாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“நீ தொழுகையில் நின்றால், ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லி அதன்பின் குர்ஆனிலிருந்து உனக்கு இலகுவானதை ஓது.

தொழுகைக்கு இடையே (முதல்) இருப்பில் அமர்ந்தால், நிம்மதியாக அமர்ந்துகொள். உனது இடது தொடையை விரித்து (அமர்ந்து) அத்தஹிய்யாத் ஓது. பின்பு மூன்றாவது ரக்அத்திற்கு நீ எழுந்தால், உனது தொழுகை முடியும் வரை இதே போல் செய்துகொள்! என்று நபி (ஸல்) சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது)

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)


«إِذَا أَنْتَ قُمْتَ فِي صَلَاتِكَ، فَكَبِّرِ اللَّهَ تَعَالَى، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ عَلَيْكَ مِنَ الْقُرْآنِ» وَقَالَ فِيهِ: «فَإِذَا جَلَسْتَ فِي وَسَطِ الصَّلَاةِ فَاطْمَئِنَّ، وَافْتَرِشْ فَخِذَكَ الْيُسْرَى ثُمَّ تَشَهَّدْ، ثُمَّ إِذَا قُمْتَ فَمِثْلَ ذَلِكَ حَتَّى تَفْرُغَ مِنْ صَلَاتِكَ»


Abu-Dawood-858

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

858. ஏழு அறிவிப்புகளில் நான்காம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கட்டளையிட்டபடி முழுமையாக அங்கத் தூய்மை செய்யாதவரை உங்களுடைய தொழுகை முழுமையடையாது. எனவே, அவர் தமது முகத்தையும், முழங்கைகள் வரை இரு கைகளையும் கழுவ வேண்டும்.

தன் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹ் செய்து), கரண்டை வரை இரு கால்களைக் கழுவ வேண்டும். அதன்பின் ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி தக்பீர் கட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்க வேண்டும்.

பின்பு குர்ஆனில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட (இலகுவான தெரிந்த) வசனங்களை ஓத வேண்டும். (என்று உள்ளது. பின்பு மேற்கண்டவாறு நபிமொழி தொடர்கிறது.)

அதன்பிறகு தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும். (ஸஜ்தாவில்) தமது முகத்தைப் பூமியில் பதியச் செய்ய வேண்டும். தம் நெற்றியை பூமியில் பதியச் செய்து இணைப்புகள் சரியாக அவற்றுக்குரிய இடங்களில் ஆகி அமைதியடையும்வரை ஸஜ்தா செய்வார். (என்று ஹம்மாமின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

பின்பு, தக்பீர் சொல்லி தமது புட்டத்தின் மீது நேராக அமருவார். தமது முதுகை

«إِنَّهَا لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَيَمْسَحَ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ يُكَبِّرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَيَحْمَدَهُ، ثُمَّ يَقْرَأَ مِنَ الْقُرْآنِ مَا أَذِنَ لَهُ فِيهِ وَتَيَسَّرَ»، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ حَمَّادٍ، قَالَ: ” ثُمَّ يُكَبِّرَ فَيَسْجُدَ فَيُمَكِّنَ وَجْهَهُ – قَالَ هَمَّامٌ: وَرُبَّمَا قَالَ: جَبْهَتَهُ مِنَ الْأَرْضِ – حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ وَتَسْتَرْخِيَ، ثُمَّ يُكَبِّرَ فَيَسْتَوِيَ قَاعِدًا عَلَى مَقْعَدِهِ وَيُقِيمَ صُلْبَهُ “، فَوَصَفَ الصَّلَاةَ هَكَذَا أَرْبَعَ رَكَعَاتٍ حَتَّى تَفْرُغَ، لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يَفْعَلَ ذَلِكَ


Abu-Dawood-857

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

857. ஏழு அறிவிப்புகளில் மூன்றாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்” என்று ஹதீஸ் ஆரம்பித்து ஹதீஸ் எண்-856 இல் உள்ளவாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் இதில், “ஒவ்வொரு மனிதரும் அங்கத் தூய்மை செய்து தொழுதால்தான் தொழுகை (ஏற்றுக்கொள்ளப்படும்); முழுமையாகும். தண்ணீர் உறுப்புகளில் முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதன்பிறகு தக்பீர் சொல்லி, மாண்பும் வல்லமையும் மிக்க இறைவனைப் புகழ்ந்து – துதித்துக் குர்ஆனிலிருந்து ஓத முடிந்ததை ஓத வேண்டும்.

பின்பு ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் அவற்றுக்குரிய இடங்களில் பொருந்துமாறு நிம்மதியாக ருகூஉ செய்ய வேண்டும்.

பின்பு, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லி நேராக நிற்க வேண்டும். பின்பு, ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் அவற்றுக்குரிய இடங்களில் பொருந்துமாறு நிம்மதியாக ஸஜ்தா செய்ய வேண்டும்.

பின்பு, அல்லாஹு அக்பர் சொல்லி தலையை உயர்த்தி நேராக அமர

أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ، فَذَكَرَ نَحْوَهُ قَالَ فِيهِ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَا تَتِمُّ صَلَاةٌ لِأَحَدٍ مِنَ النَّاسِ حَتَّى يَتَوَضَّأَ، فَيَضَعَ الْوُضُوءَ – يَعْنِي مَوَاضِعَهُ – ثُمَّ يُكَبِّرُ، وَيَحْمَدُ اللَّهَ جَلَّ وَعَزَّ، وَيُثْنِي عَلَيْهِ، وَيَقْرَأُ بِمَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَرْكَعُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَسْجُدُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، وَيَرْفَعُ رَأْسَهُ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَسْجُدُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيُكَبِّرُ، فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ “


Abu-Dawood-856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

856. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்து, (அவசர அவசரமாகத்) தொழ ஆரம்பித்தார். (அவர் தொழுது முடித்த பின்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பதில் ஸலாம் கூறிவிட்டு, “திரும்பவும் சென்று நீர் தொழுவீராக; நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு தொழுததைப் போன்றே தொழுதுவிட்டு மறுபடியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்மீது சாந்தி உண்டாகட்டும்!” என்று சொல்லிவிட்டு, “திரும்பவும் நீர் தொழுவீராக; நீர் தொழவே இல்லை” என்று மீண்டும் சொன்னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்.

அதற்கு அம்மனிதர், “சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த முறையில் தொழுவதைத் தவிர வேறு எதையும் நான்
அறிந்திருக்கவில்லை. எனவே, (தொழும் முறையை) எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் தொழுகைக்கு நின்றால் தக்பீர் கூறியபின் குர்ஆனில் உமக்குத் தெரிந்த (இலகுவான)தை ஓதுவீராக. பின்னர் அமைதியாக ருகூஉ செய்வீராக. பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி – நேராக, நிம்மதியாக

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ السَّلَامَ، وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ الرَّجُلُ، فَصَلَّى كَمَا كَانَ صَلَّى، ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكَ السَّلَامُ»، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مِرَارٍ، فَقَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا أُحْسِنُ غَيْرَ هَذَا فَعَلِّمْنِي، قَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ اجْلِسْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا»،

قَالَ الْقَعْنَبِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ فِي آخِرِهِ: «فَإِذَا فَعَلْتَ هَذَا فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ، وَمَا انْتَقَصْتَ مِنْ هَذَا شَيْئًا، فَإِنَّمَا انْتَقَصْتَهُ مِنْ صَلَاتِكَ»، وَقَالَ فِيهِ: إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ


Abu-Dawood-861

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

861. ஏழு அறிவிப்புகளில் ஏழாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி நீ அங்கத் தூய்மை செய்துகொள். அது (அங்கத் தூய்மை) முடிந்த பின் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று பாங்கு சொல். பின்பு இகாமத் சொல்லி தொழுகைக்கு நின்ற பின் தக்பீர் கூறி, குர்ஆனிலிருந்து எதுவும் (மனனமாக) இருந்தால் அதனை ஓது.

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லையென்றால் “அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்.

இவற்றிலிருந்து எதுவும் நீ குறைவு செய்தால் உனது தொழுகையில் நீ குறைவு செய்துவிட்டாய்! (என்று அறிந்துக் கொள்!) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَصَّ هَذَا الْحَدِيثَ قَالَ فِيهِ: «فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ جَلَّ وَعَزَّ، ثُمَّ تَشَهَّدْ، فَأَقِمْ ثُمَّ كَبِّرْ، فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ بِهِ، وَإِلَّا فَاحْمَدِ اللَّهَ وَكَبِّرْهُ وَهَلِّلْهُ»، وَقَالَ فِيهِ: «وَإِنِ انْتَقَصْتَ مِنْهُ شَيْئًا انْتَقَصْتَ مِنْ صَلَاتِكَ»


Abu-Dawood-4777

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கோபத்தை (மென்று விழுங்கி) கட்டுப்படுத்துபவர் (பெறும் கூலி).

4777. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர்க்கக் கன்னிகளில் அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அறிவிப்பாளர்) அபூமர்ஹூம் என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் மைமூன் என்பதாகும்.


«مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ، دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ»


Abu-Dawood-4857

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


كَلِمَاتٌ لَا يَتَكَلَّمُ بِهِنَّ أَحَدٌ فِي مَجْلِسِهِ عِنْدَ قِيَامِهِ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا كُفِّرَ بِهِنَّ عَنْهُ، وَلَا يَقُولُهُنَّ فِي مَجْلِسِ خَيْرٍ وَمَجْلِسِ ذِكْرٍ إِلَّا خُتِمَ لَهُ بِهِنَّ عَلَيْهِ كَمَا يُخْتَمُ بِالْخَاتَمِ عَلَى الصَّحِيفَةِ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ


Abu-Dawood-726

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

726.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது…

தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي، قَالَ: فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ، ثُمَّ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا، مِثْلَ ذَلِكَ فَلَمَّا سَجَدَ وَضَعَ رَأْسَهُ بِذَلِكَ الْمَنْزِلِ مِنْ بَيْنِ يَدَيْهِ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَحَدَّ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ حَلْقَةً» وَرَأَيْتُهُ يَقُولُ: هَكَذَا وَحَلَّقَ بِشْرٌ الْإِبْهَامَ وَالْوُسْطَى وَأَشَارَ بِالسَّبَّابَةِ،


Next Page » « Previous Page