Month: September 2019

Bukhari-3400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 தூஃபான் என்பது பெரு வெள்ளமாகும். தொடர் இறப்புக்கும் தூஃபான் என்பர். இறை வசனங்கள்:- 1) 7:133 2) 7:105 3) 7: 149

பாடம் : 27 மூசா (அலை) அவர்களுடன் களிர் (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி. 

3400. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) ஹுர்ரு இப்னு கைஸ் அல்ஃபஸாரீ(ரலி) அவர்களுடன் மூஸா(அலை) அவர்களின் தோழர் யார் என்னும் விஷயத்தில் தர்க்கித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவர் கிள்ர்(அலை) அவர்கள் தாம்’ என்று கூறினார்கள். அவர்கள் இருவரையும் உபை இப்னு கஅப்(ரலி) கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உபை இப்னு கஅப் அவர்களை அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்க விருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூஸா(அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து தர்க்கித்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள்.

அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), ‘ஆம்; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்’ என்றார்கள். பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒருவர் வந்து, மூஸா(அலை) அவர்களிடம், ‘உங்களை விட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். மூஸா(அலை)

أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسٍ الفَزَارِيُّ، فِي صَاحِبِ مُوسَى، قَالَ ابْنُ عَبَّاسٍ: هُوَ خَضِرٌ، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى، الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بَيْنَمَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ قَالَ: لاَ، فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى: بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجُعِلَ لَهُ الحُوتُ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ يَتْبَعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، فَقَالَ مُوسَى: {ذَلِكَ مَا كُنَّا نَبْغِ} [الكهف: 64]، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ


Bukhari-3399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3399. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தார் மட்டும் இருந்திராவிட்டால், இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள்) . என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :60


«لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ»


Bukhari-3398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

அல்லாஹ் கூறுகிறான்:

நாம் மூசாவுக்கு முப்பது இரவுகளை (நாள்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூசா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப் போரின் நடைமுறையினை மேற் கொள்ளாதீர்! என்று கூறினார்.

நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூசா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடிய போது அவர் வேண்டினார்: என் இறைவா! எனக்கு நீ காட்சி அளிப்பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.

அதற்கு இறைவன் கூறினான்: என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும். அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்ட போது அது பொடிப் பொடியாகி விட்டது. மூசாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார்.

பிறகு உணர்வு பெற்ற போது கூறினார்: நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீள்கின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக

«النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُوزِيَ بِصَعْقَةِ الطُّورِ»


Bukhari-3397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3397. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் – யூதர்கள், ‘இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்’ என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
Book :60


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ


Bukhari-3396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3396. மேலும், நபி(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘மூஸா(அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களைப் போல் உயரமானவர்கள்’ என்று கூறினார்கள்.

மேலும், ‘ஈசா(அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்’ என்று கூறினார்கள். நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களையும் நினைவு கூர்ந்தார்கள்; தஜ்ஜாலையும் நினைவு கூர்ந்தார்கள்.
Book :60


وَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ، فَقَالَ: ” مُوسَى آدَمُ، طُوَالٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَقَالَ: عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ” وَذَكَرَ مَالِكًا خَازِنَ النَّارِ، وَذَكَرَ الدَّجَّالَ


Bukhari-3395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3395. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘யூனுஸ் இப்னு மத்தா(அலை) அவர்களை விட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியானுக்கும் அழகல்ல’ என்று கூறினார்கள்.

இவ்விதம், யூனுஸ்(அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து, ‘மத்தாவின் மகன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :60


لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى “. وَنَسَبَهُ إِلَى أَبِيهِ


Bukhari-3394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 (அல்லாஹ் கூறுகிறான்:)

(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர் அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த – தம் (இறை) நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த – இறை நம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:

ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகின்றார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும்.

ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. (40:28)

பாடம் : 24 அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக் கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِي: ” رَأَيْتُ مُوسَى: وَإِذَا هُوَ رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى، فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ، كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ، وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ: فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الآخَرِ خَمْرٌ، فَقَالَ: اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ، فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ، فَقِيلَ: أَخَذْتَ الفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الخَمْرَ غَوَتْ أُمَّتُكَ


Bukhari-3393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக் கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக் கூடும்.

அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உங்கள் காலணிகளைக் கழற்றி விடுங்கள். திண்ணமாக, நீங்கள் துவா எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள். (20 :9-12)

மேலும் காண்க இறை வசனங்கள்: 1)20 : 9-12 2)20 : 10 3)20 : 12 4)20 : 21 5)20 : 54 6)20 : 87 7)20 : 81 8)28 : 10 9)28 : 34 10)28 : 19 11)28 : 20 12)28 : 29 13)28 : 35 14)20 : 27 15)20 : 31 16)20 : 61 17)20 : 63 18)20 : 64 19)20 : 67 20)20 : 71 21)20 : 95 22)20 : 97 23)20 : 119 24)28 : 11 25)12 : 3 26)20 : 40 27)20 : 42 28)20 : 77 29)20 : 87 30)20 : 88

3393. மாலிக் இப்னு ஸஃஸஆ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றிய (செய்திகளை) எங்களுக்கு அறிவித்தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் அவர்கள், ‘இவர்கள் தாம் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். நான்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَهُمْ عَنْ ” لَيْلَةَ أُسْرِيَ بِهِ: حَتَّى أَتَى السَّمَاءَ الخَامِسَةَ، فَإِذَا هَارُونُ، قَالَ: هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ، ثُمَّ قَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ


Bukhari-3392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்.

3392. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரன) கதீஜா(ரலி) அவர்களிடம், தம் மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே, கதீஜா(ரலி) நபி(ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா இப்னு நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறி விட்டிருந்த ஒரு மனிதராயிருந்தார். அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார்.

வரகா, நபி(ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘இவர்தாம் (இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத வெளிப்பாட்டைக் கொண்டு வரும்) ‘நாமூஸ்’ எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்தால், உங்களுக்கு வலிமையுடன் உதவுவேன்’ என்று கூறினார்.

‘நாமூஸ்’ என்பவர் பிறருக்கு அறிவிக்காமல் மறைக்கிற விஷயங்களை (இறை கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவித்துத் தரும் வானவராவார்.
Book : 60


فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى  وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلًا تَنَصَّرَ، يَقْرَأُ الإِنْجِيلَ بِالعَرَبِيَّةِ، فَقَالَ وَرَقَةُ: مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ، فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا “

النَّامُوسُ: صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ


Bukhari-3391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 அல்லாஹ் கூறுகிறான்:

அய்யூப் தம் இறைவனிடம் பிரார்த்தித்ததை நினைவு கூருங்கள்: என்னை நோய் பீடித்து விட்டது. நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாக இருக்கின்றாய் என்று அவர் பிரார்த்தித்தார். (21:83) 69,  மேலும் காண்க: 38:42

3391. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே, அவர்கள் அதைத் தம் துணியில் எடுக்கலானார்கள்.

அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘அய்யூபே! நீங்கள் பார்க்கிற இச்செல்வம் உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (போதிய செல்வமுடையவராக) வைத்திருக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘ஆம்; (உண்மை தான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் எனக்குத் தேவைப்படுகிறதே!’ என்று பதிலளித்தார்கள்.
Book : 60


«بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا، خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى، قَالَ بَلَى يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى لِي عَنْ بَرَكَتِكَ»


Next Page »