ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
1578. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அப்போது சில பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்கள், “நாங்கள் ஜனாஸாவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர். நபியவர்கள், “நீங்கள் (ஜனாஸாவைச்) சுமப்பீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர். “(கப்ருக்குள் ஜனாஸாவை) இறக்குபவர்களுடன் சேர்ந்து நீங்களும் இறக்குவீர்களா?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், நீங்கள் எவ்வித நன்மையுமின்றி பாவ மூட்டையுடனேயே (வீட்டிற்குத்) திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا نِسْوَةٌ جُلُوسٌ، فَقَالَ: «مَا يُجْلِسُكُنَّ» قُلْنَ: نَنْتَظِرُ الْجِنَازَةَ، قَالَ: «هَلْ تَغْسِلْنَ» قُلْنَ: لَا، قَالَ: «هَلْ تَحْمِلْنَ» ، قُلْنَ: لَا، قَالَ: «هَلْ تُدْلِينَ فِيمَنْ يُدْلِي» ، قُلْنَ: لَا، قَالَ: «فَارْجِعْنَ مَأْزُورَاتٍ غَيْرَ مَأْجُورَاتٍ»
சமீப விமர்சனங்கள்