Category: இப்னுமாஜா

Ibn-Majah-2340

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2340.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَضَى أَنْ لَا ضَرَرَ وَلَا ضِرَارَ»


Ibn-Majah-1508

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1508.


«إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ، صُلِّيَ عَلَيْهِ وَوُرِثَ»


Ibn-Majah-2751

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிறக்கும்) குழந்தை சத்தமிட்டு அழும் வரை வாரிசுரிமை பெறாது.

அறிவிப்பவர்கள்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:

சத்தமிடுதல் என்பது அக்குழந்தை அழுவது, கூச்சலிடுவது அல்லது தும்முவதாகும்.


«لَا يَرِثُ الصَّبِيُّ حَتَّى يَسْتَهِلَّ صَارِخًا» ،
قَالَ: وَاسْتِهْلَالُهُ أَنْ يَبْكِيَ وَيَصِيحَ أَوْ يَعْطِسَ


Ibn-Majah-1509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1509. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்ட) உங்கள் குழந்தைகளுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களுக்கு முன்பே சென்று, உங்களை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ، فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ»


Ibn-Majah-3132

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3132.


«نَحَرْنَا بِالْحُدَيْبِيَةِ، مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الْبَدَنَةَ، عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ، عَنْ سَبْعَةٍ»


Ibn-Majah-280

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உளூச் செய்வது இறைநம்பிக்கையில் பாதி.

280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) எனக் கூறுவது (மறுமையில் நன்மைகளின்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிச் சொற்கள் வானங்கள் மற்றும் பூமிக்கு இடைப்பட்ட பகுதியை நிரப்பும்.

தொழுகை ஒரு பிரகாசம் (ஒளி) ஆகும்; ஸகாத் ஒரு சான்றாகும்; பொறுமை ஒரு வெளிச்சமாகும்; குர்ஆன் உமக்கு ஆதரவான அல்லது உமக்கு எதிரான சாட்சியமாகும்.

மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (அல்லாஹ்விடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)


«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءُ الْمِيزَانِ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ، فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»


Ibn-Majah-3148

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3148. ஹுதைஃபா பின் அஸீத்-அபூஸரீஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிவழியைப் பற்றி நான் அறிந்து கொண்ட பின்னர் என் குடும்பத்தார் என்னை (குர்பானியில்) சுருக்கிக் கொள்வதையே கட்டாயப்படுத்தினர். (முன்னர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) ஒரு குடும்பத்தார் ஒரு ஆடு அல்லது இரண்டு ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது (அதிகமாக கொடுக்காததால்) எங்கள் அண்டை வீட்டார் எங்களை கஞ்சர்கள் என எண்ணுகின்றனர்.


«حَمَلَنِي أَهْلِي عَلَى الْجَفَاءِ بَعْدَ مَا عَلِمْتُ مِنَ السُّنَّةِ، كَانَ أَهْلُ الْبَيْتِ يُضَحُّونَ، بِالشَّاةِ وَالشَّاتَيْنِ، وَالْآنَ يُبَخِّلُنَا جِيرَانُنَا»


Ibn-Majah-1659

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1659.


” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الْحِجَّةِ “


Ibn-Majah-4257

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘என் அடியார்களே! நான் மன்னிப்பு வழங்கியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் பாவிகள். எனவே, என்னிடம் மன்னிப்பு கோருங்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன். உங்களில் எவர், நான் மன்னிப்பு வழங்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்பதை அறிந்து, எனது ஆற்றலைக் கொண்டு என்னிடம் மன்னிப்பு கோருகிறாரோ, அவரை நான் மன்னிக்கிறேன்.

நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழிகெட்டவர்களே. எனவே, என்னிடம் நேர்வழியைக் கேளுங்கள்; உங்களுக்கு நான் நேர்வழி காட்டுகிறேன். நான் செல்வந்தனாக்கியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் ஏழைகளே. எனவே, என்னிடம் கேளுங்கள்; உங்களுக்கு நான் உணவளிக்கிறேன்.

உங்களில் உயிருள்ளவர்கள், இறந்தவர்கள், முந்தையவர்கள், பிந்தையவர்கள், ஈரமானவர்கள் மற்றும் காய்ந்தவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, என் அடியார்களில் மிகத் தூய்மையான ஒருவரின் இதயத்தைப் போன்ற குணத்தவர்களாக மாறிவிட்டாலும், அது எனது ஆட்சியில் ஒரு கொசுவின் சிறகளவு கூட அதிகரிக்காது. அதேபோல், அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, என் அடியார்களில் மிகக் கெட்ட ஒருவரின் இதயத்தைப் போன்ற குணத்தவர்களாக மாறிவிட்டாலும், அது எனது ஆட்சியில் ஒரு கொசுவின் சிறகளவு கூட குறைக்காது.

மேலும்,

” إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى، يَقُولُ: يَا عِبَادِي كُلُّكُمْ مُذْنِبٌ، إِلَّا مَنْ عَافَيْتُ، فَسَلُونِي الْمَغْفِرَةَ فَأَغْفِرَ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ، فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي غَفَرْتُ لَهُ، وَكُلُّكُمْ ضَالٌّ، إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ، إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ، وَمَيِّتَكُمْ، وَأَوَّلَكُمْ، وَآخِرَكُمْ، وَرَطْبَكُمْ، وَيَابِسَكُمُ اجْتَمَعُوا، فَكَانُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي، لَمْ يَزِدْ فِي مُلْكِي جَنَاحُ بَعُوضَةٍ، وَلَوِ اجْتَمَعُوا فَكَانُوا عَلَى قَلْبِ أَشْقَى عَبْدٍ مِنْ عِبَادِي، لَمْ يَنْقُصْ مِنْ مُلْكِي جَنَاحُ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ، وَمَيِّتَكُمْ، وَأَوَّلَكُمْ، وَآخِرَكُمْ، وَرَطْبَكُمْ، وَيَابِسَكُمُ اجْتَمَعُوا، فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، مَا نَقَصَ مِنْ مُلْكِي، إِلَّا كَمَا لَوْ أَنَّ أَحَدَكُمْ مَرَّ بِشَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ فِيهَا إِبْرَةً، ثُمَّ نَزَعَهَا، ذَلِكَ بِأَنِّي جَوَادٌ مَاجِدٌ، عَطَائِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا، فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “


Next Page » « Previous Page