Category: இப்னுமாஜா

Ibn-Majah-3858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ஹம்த், லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, அல்மன்னான், பதீஉஸ் ஸமாவாதி வல்அர்ள். துல்ஜலாலி வல்இக்ராம்

(பொருள்: அல்லாஹ்வே! எல்லாப் புகழும் உனக்கே உரியது என்பதன் மூலம் நான் உன்னிடம் கேட்கிறேன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை, நீ தனித்தவன், உனக்கு இணையில்லை. பேருபகாரன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன், மகத்துவமும் கண்ணியமும் உடையவன்.)

என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர் அல்லாஹ்வின் மகத்தான பெயரைக் கொண்டு கேட்டிருக்கிறார். அதன் மூலம் அவனிடம் கேட்டால் அவன் கொடுக்கிறான். அதன் மூலம் அவனை அழைத்தால் அவன் பதிலளிக்கிறான்” என்று கூறினார்கள்.


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، فَقَالَ: «لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ»


Ibn-Majah-1806

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1806. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களின் (விசாயத்திற்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகள் அருகிலேயே வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Ibn-Majah-4141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4141.


«مَنْ أَصْبَحَ مِنْكُمْ مُعَافًى فِي جَسَدِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Ibn-Majah-4048

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குர்ஆனும், கல்வியறிவும் மறைந்து போகுதல்.

4048. ஸியாத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டபோது, “அது கல்வியறிவு மறைந்து போகும் நேரத்தில் நிகழும்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம்; எங்கள் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோம்; எங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு மறுமை நாள் வரை கற்றுக் கொடுப்பார்களே! அப்படியிருக்கும்போது, கல்வி எப்படி மறைந்து போகும்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட்டும்! நான் உன்னை மதீனாவில் உள்ள அறிவார்ந்தவர்களில் ஒருவராகவே கருதினேன். இந்தக் கல்வி யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் உள்ளது போலவே இருக்கும். அவர்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள எதனையும் செயல்படுத்துவதில்லை” என்று கூறினார்கள்.


ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَقَالَ: «ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ، أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ، وَالنَّصَارَى، يَقْرَءُونَ التَّوْرَاةَ، وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا؟»


Ibn-Majah-4112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4112.


«الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا، إِلَّا ذِكْرَ اللَّهِ، وَمَا وَالَاهُ، أَوْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا»


Ibn-Majah-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

556. ஒரு பயணி உளூச் செய்து, தம் இரு காலுறைகளையும் அணிந்து, பின்னர் உளூவை முறித்துவிட்டால், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம்; உள்ளூரில் தங்கி இருப்பவர் ஒரு இரவும் ஒரு பகலும் (மட்டும்) காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


أَنَّهُ «رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ، ثُمَّ أَحْدَثَ وُضُوءًا، أَنْ يَمْسَحَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً»


Ibn-Majah-2445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2445. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அநாதையாக வளர்ந்தேன்; ஏழையாக ஹிஜ்ரத் செய்தேன். ஃகஸ்வான் அவர்களின் மகளிடம், கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி தங்கியபோது அவர்களுக்காக விறகு சேகரித்தேன்; அவர்கள் பயணமான போது (வாகனங்களுக்கு முன் நடந்து) வழிகாட்டினேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உறுதிப்படுத்தினான்; அபூஹுரைராவை (ஒரு) தலைவராக ஆக்கினான்.


«نَشَأْتُ يَتِيمًا، وَهَاجَرْتُ مِسْكِينًا، وَكُنْتُ أَجِيرًا لِابْنَةِ غَزْوَانَ بِطَعَامِ بَطْنِي، وَعُقْبَةِ رِجْلِي، أَحْطِبُ لَهُمْ إِذَا نَزَلُوا، وَأَحْدُو لَهُمْ إِذَا رَكِبُوا، فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الدِّينَ قِوَامًا، وَجَعَلَ أَبَا هُرَيْرَةَ إِمَامًا»


Ibn-Majah-378

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

378.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ وَمَيْمُونَةَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ»


Next Page » « Previous Page