10203. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு ஒட்டகத்தில் பத்து பேரும், ஒரு மாட்டில் ஏழு பேரும் பங்கு சேர்ந்து கொண்டோம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இதைவிட மிகவும் சரியானது. ஜாபிர் (ரலி) ஹுதைபியாவிலும், ஹஜ் மற்றும் உம்ராவிலும் கலந்துகொண்டவர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் பங்கு கொள்ளுமாறு கட்டளையிட்டதாக அவர் நமக்கு அறிவித்துள்ளார். எனவே, இதுவே ஏற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். அல்லாஹ்விடமே வெற்றியும் உதவி உண்டு.
ஸுஃப்யான் ஸவ்ரீ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ‘நாங்கள் ஹுதைபியாவின் போது எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம்; ஒரு ஒட்டகம் பத்து பேருக்கு உரியதாக இருந்தது’ என்று வேறொரு செய்தி வந்துள்ளது. இது தவறான தகவல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்ஃபிர்யாபீ அவர்கள், ‘ஒரு ஒட்டகம் ஏழு
” كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرِنَا فَحَضَرْنَا النَّحْرَ فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَشَرَةٌ وَالْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ “
சமீப விமர்சனங்கள்