Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-29217

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

29217.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ، قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29214

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

29214.


أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ، وَقَالَ: «سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ»، ثُمَّ يَقُولُ: «إِنَّ هَذَا الرَّعْدَ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-34215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

34215. ஒரு மனிதர் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து அதைப் பற்றி விசாரித்தார். ஆனால், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் புறக்கணித்துவிட்டு, மக்களுடன் அவர்களின் பேச்சில் ஈடுப்பட்டார்கள்.

பின்னர் அப்துல்லாஹ் அவர்களின் பார்வை அந்த மனிதர் மீது விழுந்தபோது, அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதைக் கண்டார்கள். உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இதோ பார்! நீ என்னிடம் கேட்க வந்த விஷயம் என்னை மிகவும் கவலைப்படச் செய்துவிட்டது. நிச்சயமாக சொர்க்கத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன. பாவமன்னிப்புக் கதவு எப்போதும் திறக்கப்பட்டே இருக்கும். மற்ற அனைத்துக் கதவுகளும் திறக்கப்படும், மூடப்படும். அந்தப் பாவமன்னிப்புக் கதவுக்கு ஒரு வானவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, (நற்செயல்களைச்) செய்வீராக; ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்” என்று கூறினார்கள்.


” أَتَاهُ رَجُلٌ قَدْ أَلَمَّ بِذَنْبٍ فَسَأَلَهُ عَنْهُ فَلَهَى عَنْهُ , وَأَقْبَلَ عَلَى الْقَوْمِ بِحَدِيثِهِمْ فَحَانَتْ نَظْرَةٌ مِنْ عَبْدِ اللَّهِ فَإِذَا عَيْنُ الرَّجُلِ تُهْرَاقُ , فَقَالَ: هَذَا وَإِنَّكَ أَهَمَّنِي مَا جِئْتَ تَسْأَلُنِي عَنْهُ , إِنَّ لِلْجَنَّةِ سَبْعَةَ أَبْوَابٍ كُلُّهُمَا يُفْتَحُ وَيُغْلَقُ غَيْرُ بَابِ التَّوْبَةِ , مُوَكَّلٌ بِهِ مَلَكٌ فَاعْمَلْ وَلَا تَيْأَسْ “


Musannaf-Ibn-Abi-Shaybah-32002

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

32002. உமர் (ரலி) அவர்களின் உணவுக் கிடங்கு காப்பாளராக இருந்த மாலிக் அத்தார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்குப் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்திற்கு மழை கேட்டுப் பிரார்த்தியுங்கள்; அவர்கள் அழிந்துவிட்டார்கள்” என்றார்.

பின்னர் அந்த மனிதருக்குக் கனவு வந்தது. அதில் அவரிடம், “நீ உமரிடம் சென்று அவருக்கு ஸலாமைத் தெரிவிப்பீராக! மேலும், ‘நீங்கள் நேர்மையான பாதையில் இருக்கிறீர்கள், உமக்குரிய புத்தி கூர்மையைச் செயல்படுத்துவீராக, உமக்குரிய புத்தி கூர்மையைச் செயல்படுத்துவீராக’ என்று அவரிடம் கூறுவீராக!” என்று சொல்லப்பட்டது.

உடனே அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினார். அதைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள்; பிறகு, “என் இறைவா! என்னால் இயன்றவரை எதைக் குறித்தும் நான் குறை வைக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.


أَصَابَ النَّاسَ قَحْطٌ فِي زَمَنِ عُمَرَ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَسْقِ لِأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا، فَأَتَى الرَّجُلَ فِي الْمَنَامِ فَقِيلَ لَهُ: ” ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلَامَ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْتَقِيمُونَ وَقُلْ لَهُ: عَلَيْكَ الْكَيْسُ، عَلَيْكَ الْكَيْسُ “، فَأَتَى عُمَرَ فَأَخْبَرَهُ فَبَكَى عُمَرُ ثُمَّ قَالَ: يَا رَبِّ لَا آلُو إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-29423

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

29423.


«لَأَنْ أَقُولَهَا، يَعْنِي سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَحْمِلَ عَلَى عِدَّتِهَا مِنْ خَيْلٍ بِأَرْسَانِهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-33038

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

33038. ஸல்மான் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; மற்றொரு மனிதர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:

இரு மனிதர்கள் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றனர். அக்கூட்டத்தினர் தங்களுக்கென ஒரு சிலையினை வைத்து (அதனை வணங்கி) அதில் மூழ்கிப் போயிருந்தனர். ‘இன்று எம்மை எவர் கடந்து சென்றாலும் (இந்தச் சிலைக்கு) ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்காமல் செல்லக்கூடாது’ என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிக்கொண்டனர்.

அவர்கள் அவ்விருவரில் ஒருவரிடம், ‘ஏதாவது ஒன்றை (சிலைக்கு) அர்ப்பணிப்பீராக!’ என்று கூறினர். அவர் (அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எதையும் அர்ப்பணிக்க) மறுத்துவிட்டார். அதனால் அவர் கொல்லப்பட்டார். (அவர் சொர்க்கம் சென்றார்).

பின்னர் அவர்கள் மற்றொருவரிடம், ‘நீரும் ஏதாவது ஒன்றை அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லையே’ என்றார். அவர்கள், ‘ஓர் ஈயையேனும் அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘ஒரு ஈதானே, இதில் என்ன இருக்கப் போகிறது’ என்று கூறி, ஓர் ஈயை அர்ப்பணித்தார். (இதன் காரணமாக) அவர் நரகில் நுழைந்தார்.”

அப்போது ஸல்மான் (ரலி) அவர்கள், “இவர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; அவர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்”

«دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ وَدَخَلَ رَجُلٌ النَّارَ، مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ قَدْ عَكَفُوا عَلَى صَنَمٍ لَهُمْ» وَقَالُوا: لَا يَمُرُّ عَلَيْنَا الْيَوْمَ أَحَدٌ إِلَّا قَدَّمَ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَدِّمْ شَيْئًا، فَأَبَى فَقُتِلَ، وَقَالُوا لِلْآخَرِ: قَدِّمْ شَيْئًا، فَقَالُوا: قَدِّمْ وَلَوْ ذُبَابًا، فَقَالَ: وَأَيْشٍ ذُبَابٌ، فَقَدَّمَ ذُبَابًا فَدَخَلَ النَّارَ، فَقَالَ سَلْمَانُ: «فَهَذَا دَخَلَ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ هَذَا النَّارَ فِي ذُبَابٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19522

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

19522.


بَعَثَ أَبُو بَكْرٍ جَيْشًا إِلَى الشَّامِ فَخَرَجَ يُشَيِّعُهُمْ عَلَى رِجْلَيْهِ فَقَالُوا: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنْ لَوْ رَكِبَتْ , قَالَ: أَحْتَسِبُ خُطَايَ فِي سَبِيلِ اللَّهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-36795

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

36795. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உஹுத் போரின்போது நான் உங்களைக் கண்டேன். (ஆனால், எதிர்த்துத் தாக்காமல்) உங்களை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆனால், நான் உன்னைக் கண்டிருந்தால் உன்னை விட்டு முகத்தை திருப்பியிருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.


قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ لِأَبِي بَكْرٍ: ” رَأَيْتُكَ يَوْمَ أُحُدٍ فَصَدَفْتُ عَنْكَ , قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: «لَكِنِّي لَوْ رَأَيْتُكَ مَا صَدَفْتُ عَنْكَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-15565

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

15565. ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது பத்னுல் வாதீ எனும்) பள்ளத்தின் நடுவில் வேகமாகச் செல்லும்போது, “ரப்பிஃக்ஃபிர் வர்ஹம் இன்னக்க அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறிவந்தார்கள்.

(பொருள்: என் இரட்சகனே! மன்னிப்பாயாக. கிருபை செய்வாயாக. நிச்சயமாக நீயே எல்லோரையும்விட மிக கண்ணியமானவனும், மிக்க கொடை வள்ளலும் ஆவாய்)


كَانَ عَبْدُ اللَّهِ إِذَا سَعَى فِي بَطْنِ الْوَادِي قَالَ: «رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


Next Page »