Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-34319

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

34319. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:

ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!

1 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
2 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
5 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شَغْلِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-31904

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

31904. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இவர்தான் அஸ்மா” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.


دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ فَقَالُوا: ” هَذِهِ أَسْمَاءُ، قَالَ: فَأَتَاهَا فَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ لَهَا: إِنَّ الْجِيفَةَ لَيْسَتْ بِشَيْءٍ، وَإِنَّمَا الْأَرْوَاحُ عِنْدَ اللَّهِ فَاصْبِرِي وَاحْتَسِبِي، قَالَتْ: وَمَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنِ زَكَرِيَّا إِلَى بَغِيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-30674

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

30674. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இவர்தான் அஸ்மா” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.


دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ , فَقَالُوا لَهُ: هَذِهِ أَسْمَاءُ , فَأَتَاهَا فَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ: ” إِنَّ الْجُثَّةُ لَيْسَتْ بِشَيْءٍ , وَإِنَّمَا الْأَرْوَاحُ عِنْدَ اللَّهِ , فَاصْبِرِي وَاحْتَسِبِي , فَقَالَتْ: مَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنُ زَكَرِيَّا إِلَى بَغِيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-37328

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

37328. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இதோ இங்கு அஸ்மா உள்ளார்கள்” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.


دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ , فَقَالُوا لَهُ: هَذِهِ أَسْمَاءُ , فَأَتَاهَا وَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ: إِنَّ الْجُثَّةَ لَيْسَتْ بِشَيْءٍ وَإِنَّ الْأَرْوَاحَ عِنْدَ اللَّهِ فَاصْبِرِي وَاحْتَسِبِي , فَقَالَتْ: «وَمَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنِ زَكَرِيَّا إِلَى بِغَيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29249

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29249. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“முஅத்தின் ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதை ஒருவர் கேட்டு, ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ், ரளீத்து பில்லாஹி ரப்பன், வபில் இஸ்லாமி தீனன், வபிமுஹம்மதின் நபிய்யன்’

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று, நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை என் இறைவனாகவும், இஸ்லாமை என் மார்க்கமாகவும், முஹம்மதை என் தூதராகவும் நான் பொருந்திக் கொண்டேன்) என்று கூறினால், அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர் அவரிடம், “ஸஃத் அவர்களே! அவரது முந்தைய பாவங்களும், பிந்தைய பாவங்களும் மன்னிக்கப்படுமா?” என்று கேட்டார்.

அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இல்லை. நபி (ஸல்) அவர்கள் (அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்று) இவ்வாறு கூறியதைத் தான், நான் கேட்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.


مَنْ قَالَ إِذَا قَالَ الْمُؤَذِّنُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، غُفِرَ لَهُ ذُنُوبُهُ “، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا سَعْدُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «لَا، هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-32011

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

32011. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் நாவில் ‘ஸகீனா’ எனும் அமைதி (அல்லாஹ்வின் அருள்) இறங்குகிறது என்று நாங்கள் (சில நேரம்) பேசிக்கொள்வோம்.


«كُنَّا نَتَحَدَّثُ أَنَّ السَّكِينَةَ تَنْزِلُ عَلَى لِسَانِ عُمَرَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-26264

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26264. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவர் ஒரு உதவியைக் கேட்க விரும்பினால், அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஒருவரிடம் சென்று, அவர் முகத்திற்கு நேராக அவரைப் புகழ்ந்து, அவர் முதுகை முறித்து, அதனால் அவர் எதையும் மறுக்க முடியாமல் செய்ய வேண்டாம்

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)


«إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، وَلَا يَأْتِي الرَّجُلَ فَيُثْنِيَ عَلَيْهِ فِي وَجْهِهِ، فَيَقْطَعَ ظَهْرَهُ فَلَا يَمْنَعُهُ شَيْئًا»


Next Page » « Previous Page