ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
5920. அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்கள், “அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று (என்னிடம்) கூறினார்கள்.
ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிவிப்பில் ” நான் பள்ளிவாசலில் இவ்வாறு உட்கார்ந்திருந்த நிலையில்” என்று இடம்பெற்றுள்ளது.
مَرَّ بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعَتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي , وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي , فَقَالَ: ” أَتَقْعُدُ قَعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ “. لَفْظُ حَدِيثِ عَلِيِّ بْنِ بَحْرٍ ,
وَفِي رِوَايَةِ عَبْدِ الْوَهَّابِ , قَالَ: وَأَنَا جَالِسٌ فِي الْمَسْجِدِ وَاضِعًا يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي مُتَّكِئًا عَلَى أَلْيَةِ يَدِي
சமீப விமர்சனங்கள்