Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-1664

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1664.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: «اللَّهُمْ صَلِّ عَلَى مُحَمَّدٍ، اللَّهُمُ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ»، وَإِذَا خَرَجَ، قَالَ مِثْلَهَا إِلَّا أَنَّهُ يَقُولُ: «أَبْوَابَ فَضْلِكَ»


Musannaf-Abdur-Razzaq-1665

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1665. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ் லனா அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எங்களுக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நாங்கள் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறோம்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)


إِذَا دَخَلْتُمُ الْمَسْجِدَ فَقُولُوا: اللَّهُمُ افْتَحْ لَنَا أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجْتُمْ فَقُولُوا: اللَّهُمْ إِنَّا نَسْأَلُكَ مِنْ فَضْلِكَ


Musannaf-Abdur-Razzaq-7421

ஹதீஸின் தரம்: More Info

7421. நீங்கள் நோன்பாளியாக இருக்கும் போது மனைவியை முத்தமிடுவீர்களா என்று அபூஹுரைரா (ரலி) கேட்கப்பட்டபோது அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்…

இவ்வாறே ஸஅது பின் மாலிக்-ஸஅது பின்அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோதும் ஆம் என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)

 


قِيلَ لِأَبِي هُرَيْرَةَ: تُقَبِّلُ، وَأَنْتَ صَائِمٌ؟ قَالَ: «نَعَمْ، وَأَكْفَحُهَا، يَعْنِي يَفْتَحُ فَاهُ إِلَى فِيهَا»

قَالَ: قِيلَ لِسَعْدِ بْنِ مَالِكٍ: تُقَبِّلُ، وَأَنْتَ صَائِمٌ؟ قَالَ: «نَعَمْ، وَأَخَذَ بِمَتَاعِهَا»


Musannaf-Abdur-Razzaq-7304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7304. ரமலான் பிறை விசயத்தில், “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் அறிவிப்பில் “ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي هِلَالِ رَمَضَانَ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، ثُمَّ إِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا ثَلَاثِينَ صَوْمَكُمْ يَوْمَ تَصُومُونَ، وَفِطْرَكُمْ يَوْمَ تُفْطِرُونَ»

وَزَادَ ابْنُ جُرَيْجٍ فِي هَذَا الْحَدِيثِ: «وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ»


Musannaf-Abdur-Razzaq-7318

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

7318. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார்:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் விலகிச் சென்றார். அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், அவரிடம் பக்கத்தில் வரக் கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் நான் எப்போதும் வைக்கும் நோன்பை வைத்துள்ளேன் என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் இதை சாப்பிடு! என்று கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فِي رَمَضَانَ، فَجِيءَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ قَالَ: «ادْنُ» قَالَ: إِنِّي صَائِمٌ، وَمَا هُوَ إِلَّا صَوْمٌ كُنْتُ أَصُومُهُ، فَقَالَ: «أَمَّا أَنْتَ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ؟ فَاطْعَمَ»


Musannaf-Abdur-Razzaq-7908

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7908. ஒரு பெண் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோன்புத் துறக்க அழைத்திருக்க, அவர்களும் அங்கு சென்று நோன்பு திறந்தார்.

பின்பு நோன்பாளி, ஒரு வீட்டாரிடம் நோன்பு துறந்தால் அவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றே அந்த வீட்டாருக்கும் கூலி கிடைக்கும் என்ற செய்தியை உனக்கு அறிவிக்கிறேன் என்று (அந்த பெண்ணிடம்)  கூறினார்கள்.

அதற்கு அந்த பெண், நீங்கள் என் வீட்டில் நோன்பு துறக்கும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தேன் என்று கூறினார். நான் நோன்பு துறக்கும் வீட்டாருக்கும் எனக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்க விரும்புகிறேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அபூ கஸீர் (ரஹ்)

 


دَعَتْهُ امْرَأَةٌ لِيُفْطِرَ عِنْدَهَا فَفَعَلَ، وَقَالَ: «إِنِّي أُخْبِرُكِ أَنَّهُ لَيْسَ مِنْ رَجُلٍ يُفْطِرُ عِنْدَ أَهْلِ بَيْتٍ إِلَّا كَانَ لَهُمْ مِثْلُ أَجْرِهِ»، فَقَالَتْ: وَدِدْتُ أَنَّكَ تَتَحَيَّنُ، أَوْ نَحْوَ ذَلِكَ لِتُفْطِرَ عِنْدِي قَالَ: «إِنِّي أُرِيدُ أَنْ أَجْعَلَهُ لِأَهْلِ بَيْتِي»


Musannaf-Abdur-Razzaq-7906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7906. யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலி போன்றே நோன்பு திறக்கச் செய்தவருக்கும் கூலி கிடைக்கும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் (ரஹ்)


«مَنْ فَطَّرَ صَائِمًا أَطْعَمَهُ وَسَقَاهُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ»


Musannaf-Abdur-Razzaq-7905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7905. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا، أَطْعَمَهُ وَسَقَاهُ كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ»


Musannaf-Abdur-Razzaq-8868

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8868. நபி (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். உன்னுடைய ஊரில்வசிப்பவர்கள் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


وَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَزْوَرَةِ فَقَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبَّ الْأَرْضِ إِلَى اللَّهِ، وَلَوَلَا أَنَّ أَهْلَكِ أَخَرَجُونِي مَا خَرَجْتُ»


Musannaf-Abdur-Razzaq-8869

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8869. ஹதீஸ் எண்- 8868 இல் வரும் செய்தி இப்னு ஜுரைஜின் ஆசிரியர்கள் அறிவிக்கும் இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது…


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ خَيْرُ بَلَادِ اللَّهِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ مَعْمَرٍ


Next Page » « Previous Page