8020. ஹதீஸ் எண்-8019 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
ரவ்ஹு பின் உபாதாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவர் மேற்கண்ட செய்தியுடன் “அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற கூடுதலான வாசகத்தை அறிவித்துள்ளார்.
ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்திகளை சரியானவை என்று ஏற்றுக் கொண்டாலும் அதிகமான கல்வியாளர்கள், “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகுவதற்குச் சற்று முன்பே பாங்கு கூறுவார் என்பதால் அப்போது தண்ணீர் குடித்துக் கொள்வது ஃபஜ்ர் உதயமாகுவதற்கு முன்பே அமைந்துவிடும்” என்று இந்தச் செய்திகளுக்கு விளக்கமளிக்கின்றனர்.
“அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற வாசகம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் கூறிய வாசகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்படி இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகிவிடும். அல்லது இந்த வாசகம் இரண்டாவது பாங்கைப் பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
“உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது)
مِثْلَهُ ,
قَالَ الرِّيَاحِيُّ فِي رِوَايَتِهِ وَزَادَ فِيهِ: وَكَانَ الْمُؤَذِّنُونَ يُؤَذِّنُونَ إِذَا بَزَغَ الْفَجْرُ.
وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ حَمَّادٍ،
சமீப விமர்சனங்கள்