Month: May 2023

Muwatta-Malik-2833

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 78

பொருளை விரையமாக்குவது, இரட்டைவேடமிடுவது (ஆகியவை) குறித்து வந்துள்ளவை.

2833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான்.

1 . நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும்;

2 . பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும்;

3 . உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான்.

1 . (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும்;

2 . பொருளை விரையமாக்குவதையும்;

3 . (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ் (ரஹ்)


إِنَّ اللهَ يَرْضَى لَكُمْ ثَلاَثًا، وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثًا: يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعًا، وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلاَّهُ اللهُ أَمْرَكُمْ، وَيَسْخَطُ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ.


Nasaayi-4009

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4009.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கியும் தொழுகையை நிலைநாட்டியும் ஸகாத்தைக் கொடுத்தும் பெரும்பாவங்களைச் செய்யாமல் (மறுமையில்) வருபவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)


«مَنْ جَاءَ يَعْبُدُ اللَّهَ، وَلَا يُشْرِكُ بِهِ شَيْئًا، وَيُقِيمُ الصَّلَاةَ، وَيُؤْتِي الزَّكَاةَ، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ كَانَ لَهُ الْجَنَّةُ» فَسَأَلُوهُ عَنِ الْكَبَائِرِ، فَقَالَ: «الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ الْمُسْلِمَةِ، وَالْفِرَارُ يَوْمَ الزَّحْفِ»


Musnad-Ahmad-8718

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8718. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான்.

1 . நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும்;

2 . உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும்;

3 . பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான்.

1 . (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும்;

2 . (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும்;

3 . பொருளை விரையமாக்குவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ رَضِيَ لَكُمْ ثَلَاثًا، وَكَرِهَ لَكُمْ ثَلَاثًا: رَضِيَ لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَنْصَحُوا لِمَنْ وَلَّاهُ اللَّهُ أَمْرَكُمْ، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا، وَلَا تَفَرَّقُوا، وَكَرِهَ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ


Musnad-Ahmad-19153

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19153. (நபி-ஸல்-அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! நான் அவசியம் கடைபிடிக்க வேண்டியதை எனக்குக் கூறுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக நீர் எதையும் ஆக்காமல் அவனை வணங்க வேண்டும். கடமையான தொழுகையைத் தொழ வேண்டும். கடமையான ஸகாத்தை நீ நிறைவேற்ற வேண்டும். முஸ்லிமிற்கு நலம் நாட வேண்டும். இறை நிராகரிப்பாளனை விட்டு விலகிவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اشْتَرِطْ عَلَيَّ. فَقَالَ: «تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُصَلِّي الصَّلَاةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَنْصَحُ لِلْمُسْلِمِ، وَتَبْرَأُ مِنَ الْكَافِرِ»


Musnad-Ahmad-24366

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

24366. உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை உங்களின் அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَا تَجْعَلُوهَا عَلَيْكُمْ قُبُورًا»


Abi-Yala-4867

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4867. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ»


Hakim-5

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமாகி) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானை புதுப்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாருங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

 


«إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الْخَلِقُ، فَاسْأَلُوا اللَّهَ أَنْ يُجَدِّدَ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ»


Almujam-Alkabir-84

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

84. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமாகி) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானை புதுப்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாருங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ، فَيَتْلُو، فَاتْلُوا الْقُرْآنَ يُجَدِّدُ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ»

«إِنَّ الإِيمَانَ لَيَخْلَقُ (2) فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الخَلَقُ؛ [فَسَلُوا اللهَ أَنْ] (3) يُجَدِّدَ الإِيمَانَ فِي قُلُوبِكُمْ»


Almujam-Alkabir-4295

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4295. ராஃபிஉ பின் கதீஜ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)


أَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»


Next Page » « Previous Page