ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
3416.
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) கூறினார்கள்:
திண்ணைத் தோழர்களுக்கு குர்ஆனையும் எழுத்தறிவையும் கற்றுக்கொடுத்தேன். அதனால் அவர்களுள் ஒருவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. மேலும் நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்யப் பயன்படுத்துவேன்; (இருந்தாலும்) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, (இதற்கான விளக்கத்தைக்) கேட்பேன் என்று நான் கூறிக்கொண்டேன்.
எனவே நான் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தவர்களுள் ஒருவர், எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்ய(ப் பயன்படுத்த)லாமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “அதன் மூலம் (உமக்கு) நெருப்பு மாலை போடப்படுவது உமக்கு மகிழ்ச்சியளித்தால், அதை நீர் ஏற்றுக்கொள்” என்று கூறினார்கள்.
عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ، وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ: لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ، وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا»،
சமீப விமர்சனங்கள்