தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-152

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் யுத்தத்தின் போது பின் தங்கி விட்டார்கள் என்று முகீரா (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைக் கூறி பின்வருமாறு அறிவிக்கின்றார்.

நாங்கள் மக்களிடம் வரும்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) மக்களுக்கு சுபுஹ் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் அவர் பின்னால் வர விரும்பினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி (தொழுகையை) தொடரும்படி சைகை செய்தார்கள். நானும், நபி (ஸல்) அவர்களும் அவருக்குப் பின் ஒரு ரக்அத்தை தொழுதோம். அவர் ஸலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று விடுபட்ட ரக்அத்தை தொழுதார்கள். அவர்கள் அதைவிட வேறு எதையும் அதிகமாக செய்யவில்லை. 

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் : (ஜமாஅத்) தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைபவர் ஸஜ்தா ஸஹ்வு செய்யவேண்டும் என்று அபூசயீத் அல்குத்ரீ இப்னு உவர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

(அபூதாவூத்: 152)

حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، وَعَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، قَالَ

تَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ هَذِهِ الْقِصَّةَ، قَالَ: فَأَتَيْنَا النَّاسَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يُصَلِّي بِهِمُ الصُّبْحَ ، فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ أَنْ يَمْضِيَ، قَالَ: فَصَلَّيْتُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ رَكْعَةً، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي سُبِقَ بِهَا، وَلَمْ يَزِدْ عَلَيْهَا

قَالَ أَبُو دَاوُدَ: أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، وَابْنُ الزُّبَيْرِ، وَابْنُ عُمَرَ، يَقُولُونَ: «مَنْ أَدْرَكَ الْفَرْدَ مِنَ الصَّلَاةِ عَلَيْهِ سَجْدَتَا السَّهْوِ»


AbuDawood-Tamil-152.
AbuDawood-Shamila-152.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.