பாடம் : 27
மற்றவர்களின் பல்குச்சியால் பல் துலக்குதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களினருகில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை விட மூத்தவர். அப்போது பல் துலக்குவதைச் சிறப்பிக்கும் விதத்தில் அவ்விருவரில் மூத்தவருக்கு பற்குச்சியை வழங்கி கண்ணியப்படுத்தும் படி நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறை அறிவிப்புச் செய்யப்பட்டது என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் இதே ஹதீஸின் கருத்தை முஸ்லிம் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பதிவு செய்துள்ளனர்.
(அபூதாவூத்: 50)27- بَابٌ فِي الرَّجُلِ يَسْتَاكُ بِسِوَاكِ غَيْرِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلَانِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي فَضْلِ السِّوَاكِ، أَنْ كَبِّرْ أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا»
AbuDawood-Tamil-50.
AbuDawood-Shamila-50.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்