Author: Abdul Hakkim

Al-Adabul-Mufrad-254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

254. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் ஒரு குழுவினரிடம் சென்றார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக, நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் குறைவாகச் சிரித்து, அதிகமாக அழுவீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். (அவர்களின் வார்த்தைகள்) அந்த தோழர்களை அழ வைத்து விட்டது. அப்போது மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீ) இறைச் செய்தி அறிவித்தான்: முஹம்மதே, என் அடியார்களை நீர் ஏன் நம்பிக்கையிழக்கச் செய்கிறீர்?.

உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து, “நற்செய்தி பெறுங்கள்! நேர்மையாக நடந்து, நல்லதை நாடுங்கள்” என்று கூறினார்கள்.


خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَهْطٍ مِنْ أَصْحَابِهِ يَضْحَكُونَ وَيَتَحَدَّثُونَ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا» ، ثُمَّ انْصَرَفَ وَأَبْكَى الْقَوْمَ، وَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ: «يَا مُحَمَّدُ، لِمَ تُقَنِّطُ عِبَادِي؟» ، فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَبْشِرُوا، وَسَدِّدُوا، وَقَارِبُوا»


Almujam-Alawsat-2583

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

2583. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வழக்கத்திற்கு மாறாக ஒரு நேரத்தில் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “ஜிப்ரீலே, உன் நிறம் மாறியிருப்பதைப் பார்க்கிறேன், என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “நரகத்தின் சாவிகளை அல்லாஹ் ஒப்படைக்க உத்தரவிட்டபடியால் நான் உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “ஜிப்ரீலே, நரகத்தைப் பற்றி விவரித்து, ஜஹன்னத்தை எனக்கு விளக்கு” என்று கேட்டார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:

அல்லாஹ் ஜஹன்னத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்பை மூட்டும்படி கட்டளையிட்ன். அது வெண்மையாக மாறியது. பின்னர் மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் நெருப்பை மூட்டும்படி கட்டளையிட்டான். அது சிவப்பாக மாறியது. பின்னர் மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் நெருப்பை மூட்டும்படி கட்டளையிட்டான். அது கறுப்பாக மாறியது. அது இப்போது கரும் கறுப்பாக, இருளடைந்து காணப்படுகிறது. அதன் பொறிகள் ஒளிவிடுவதில்லை, அதன் சுடர் அணைக்கப்படுவதுமில்லை.

உம்மை சத்தியத்துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! ஜஹன்னத்தின் ஒரு ஊசித்துளை அளவு திறக்கப்பட்டாலும், பூமியிலுள்ள அனைவரும் அதன் வெப்பத்தால் இறந்து

قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِينٍ غَيْرِ حِينِهِ الَّذِي كَانَ يَأْتِيهِ فِيهِ، فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا جِبْرِيلُ مَا لِي أَرَاكَ مُتَغَيِّرَ اللَّوْنِ؟» فَقَالَ: «مَا جِئْتُكَ حَتَّى أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِمَفَاتِيحِ النَّارِ»

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا جِبْرِيلُ، صِفْ لِيَ النَّارَ، وانْعَتْ لِي جَهَنَّمَ» فَقَالَ جِبْرِيلُ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى أَمَرَ بِجَهَنَّمَ فَأُوقِدَ عَلَيْهَا أَلْفَ عَامٍ حَتَّى ابْيَضَّتْ، ثُمَّ أَمَرَ فَأُوقِدَ عَلَيْهَا أَلْفَ عَامٍ حَتَّى احْمَرَّتْ، ثُمَّ أَمَرَ فَأُوقِدَ عَلَيْهَا أَلْفَ عَامٍ حَتَّى اسْوَدَّتْ، فَهِيَ سَوْدَاءُ مُظْلِمَةٌ لَا يُضِيءُ شَرَرُهَا، وَلَا يُطْفَأُ لَهَبُهَا، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَوْ أَنَّ قَدْرَ ثُقْبِ إِبْرَةٍ فُتِحَ مِنْ جَهَنَّمَ لَمَاتَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا مِنْ حَرِّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَوْ أَنَّ ثَوْبًا مِنْ ثِيَابِ النَّارِ عُلِّقَ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَمَاتَ مَنْ فِي الْأَرْضِ جَمِيعًا مِنْ حَرِّهِ،

وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَوْ أَنَّ خَازِنًا مِنْ خَزَنَةِ جَهَنَّمَ بَرَزَ إِلَى أَهْلِ الدُّنْيَا، فَنَظَرُوا إِلَيْهِ لَمَاتَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ مِنْ قُبْحِ وَجْهِهِ وَمِنْ نَتْنِ رِيحِهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَوْ أَنَّ حَلْقَةً مِنْ حَلْقَةِ سِلْسِلَةِ أَهْلِ النَّارِ الَّتِي نَعَتَ اللَّهُ فِي كِتَابِهِ وُضِعَتْ عَلَى جِبَالِ الدُّنْيَا لَارْفَضَّتْ، وَمَا تَقَارَبَتْ حَتَّى تَنْتَهِيَ إِلَى الْأَرْضِ السُّفْلَى» ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَسْبِي يَا جِبْرِيلُ لَا يَنْصَدِعُ قَلْبِي، فَأَمُوتُ»

قَالَ: فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ وَهُوَ يَبْكِي، فَقَالَ: «تَبْكِي يَا جِبْرِيلُ وَأَنْتَ مِنَ اللَّهِ بِالْمَكَانِ الَّذِي أَنْتَ بِهِ؟» قَالَ: «وَمَا لِيَ لَا أَبْكِي؟ أَنَا أَحَقُّ بِالْبُكَاءِ لَعَلِّي أَنْ أَكُونَ فِي عِلْمِ اللَّهِ عَلَى غَيْرِ الْحَالِ الَّتِي أَنَا عَلَيْهَا، وَمَا أَدْرِي لَعَلِّي أُبْتَلَى بِمِثْلِ مَا ابْتُلِيَ بِهِ إِبْلِيسُ، فَقَدْ كَانَ مِنَ الْمَلَائِكَةِ، وَمَا يُدْرِينِي لَعَلِّي أُبْتَلَى بِمِثْلِ مَا ابْتُلِيَ بِهِ هَارُوتُ وَمَارُوتُ» قَالَ: فَبَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَكَى جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَمَا زَالِا يَبْكِيَانِ حَتَّى نُودِيَا: أَنْ يَا جِبْرِيلُ وَيَا مُحَمَّدُ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَمَّنَكُمَا أَنْ تَعْصِيَاهُ، فَارْتَفَعَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ،

وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرَّ بِقَوْمٍ مِنَ الْأَنْصَارِ يَضْحَكُونَ ويَلْعَبُونَ، فَقَالَ: «أَتَضْحَكُونَ وَوَرَاءَكُمْ جَهَنَّمُ؟ فَلَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَمَا أَسَغْتُمُ الطَّعَامَ وَالشَّرَابَ، وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأَرُونَ إلَى اللَّهِ عَزَّ


Shuabul-Iman-1596

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1596. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாருக்கு அவர்களின் மார்க்க விஷயங்களில் பயனளிக்கக்கூடிய நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவர் மறுமை நாளில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்.

மேலும் ஒரு அறிஞர், (அறிஞரல்லாத) வணக்கசாலியை விட எழுபது படித்தரங்கள் மேலானவராக இருப்பார். (அவைகளில்) இரு படித்தரங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا فِيمَا يَنْفَعُهُمْ مِنْ أَمْرِ دِينِهِمْ بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْعُلَمَاءِ، وَفُضِّلَ الْعَالِمُ عَلَى الْعَابِدِ سَبْعِينَ دَرَجَةً، اللهُ أَعْلَمُ بِمَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ


Shuabul-Iman-1598

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1598. ஹதீஸ் எண்-1597 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இது மக்களிடையே பிரபலமான ஒரு செய்தியாகும். ஆனால், இதற்கு எந்த ஒரு சரியான அறிவிப்பாளர்தொடரும் இல்லை.


سَأَلْتُ، وَقَالَ: ” وَكُنْتُ لَهُ شَفِيعًا وَشَهِيدًا


Shuabul-Iman-1597

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1597. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் எந்த அளவுக்கு அறிவை அடைந்தால், அவர் ஓர் (ஃபகீஃ) மார்க்க அறிஞராக கருதப்படுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் மார்க்க விஷயங்கள் தொடர்பான நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவரை ஓர் மார்க்க அறிஞராக அல்லாஹ் எழுப்புவான். மேலும், மறுமை நாளில் நான் அவருக்கு பரிந்துரையாளனாகவும், சாட்சியாகவும் இருப்பேன்.


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا حَدُّ الْعِلْمِ إِذَا بلغهُ الرَّجُلُ كَانَ فَقِيهًا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا مِنْ أَمْرِ دِينِهَ بَعَثَهُ اللهُ فَقِيهًا، وَكُنْتُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا وَشَهِيدًا


Nasaayi-2598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவர் யாசகம் கேட்பது.

2598. (நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்கச் சென்றோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். (இதை அறிவிப்பவர்களில் ஒருவரான முஹம்மத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர்கள்மீது சுழலவிட்டார்கள்” என்று கூறினார்கள்.) அவர்கள் இருவரும் பலமானவர்களாக இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் விரும்பினால் (தர்மத்தைப் பெற்றுக் கொள்ளலாம்). ஆனால், தர்மத்தில் பணக்காரனுக்கோ அல்லது உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவனுக்கோ பங்கில்லை.


أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا: أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ؟ فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ، – وَقَالَ مُحَمَّدٌ: بَصَرَهُ – فَرَآهُمَا جَلْدَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»


Tirmidhi-3000

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3000. அபூ ஃகாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஉமாமா (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரின் படிகளில் (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) சில தலைகள் நடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இவை நரகத்தின் நாய்கள். வானத்தின் கீழ் கொல்லப்பட்டவர்களிலேயே இவர்கள்தான் மிகக் கொடியவர்கள். யாரை இந்த காரிஜிய்யாக்கள் கொன்றார்களோ அவர்கள்தான் கொல்லப்பட்டவர்களில் சிறந்தவர்கள்.

பின்னர் அவர்கள், “அன்று சில முகங்கள் வெண்மையாகவும், சில முகங்கள் கருமையாகவும் இருக்கும்” எனும் (அல்குர்ஆன்: 3:106) ஆவது வசனத்தை அதன் இறுதி வரை ஓதினார்கள்.

நான் அபூஉமாமா (ரலி) அவர்களிடம், “இதனை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டீங்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் இதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது நான்கு முறை (ஏழு முறை வரை எண்ணினார்) கேட்டிராவிட்டால், உங்களுக்கு இதை அறிவித்திருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.


رَأَى أَبُو أُمَامَةَ رُءُوسًا مَنْصُوبَةً عَلَى دَرَجِ دِمَشْقَ، فَقَالَ أَبُو أُمَامَةَ: «كِلَابُ النَّارِ شَرُّ قَتْلَى تَحْتَ أَدِيمِ السَّمَاءِ، خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ»، ثُمَّ قَرَأَ: {يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ} [آل عمران: 106] إِلَى آخِرِ الآيَةِ، قُلْتُ لِأَبِي أُمَامَةَ: أَنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْ لَمْ أَسْمَعْهُ إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا أَوْ أَرْبَعًا حَتَّى عَدَّ سَبْعًا مَا حَدَّثْتُكُمُوهُ


Shuabul-Iman-8080

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8080.


” مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى إِلَّا أُوتُوا الْجَدَلَ “، ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Hakim-3674

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3674.


«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى إِلَّا أُوتُوا الْجَدَلَ» ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Almujam-Alkabir-8067

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8067. ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,

“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا جَدَلًا» ، ثُمَّ قَرَأَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Next Page »