Author: Abdul Hakkim

Musannaf-Ibn-Abi-Shaybah-32674

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

32674. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.

அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)


أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ وَالْمِهْرَجَانِ , فَيَقُولُ لِأَهْلِهِ: مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَاقْبَلُوهُ , وَمَا كَانَ سِوَى ذَلِكَ فَرُدُّوهُ


Ibn-Majah-168

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

168. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக் காலத்தில் சில இளைஞர்கள் தோன்றுவார்கள். அவர்கள் வயதில் சிறியவர்களாக இருப்பார்கள்; அறிவில் மழுங்கியவர்களாக இருப்பார்கள். மக்களில் சிறந்தவரான நபியின் சொல்லையே கூறுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. இஸ்லாத்திலிருந்து வில்லிலிருந்து அம்பு வெளியேறுவதுபோல் விரைவாக விலகிவிடுவார்கள்.

எவரேனும் அவர்களைச் சந்தித்தால், அவர்களைக் கொன்றுவிட வேண்டும். ஏனெனில், அவர்களைக் கொல்வது அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்கும் செயலாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الْأَسْنَانِ، سُفَهَاءُ الْأَحْلَامِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ النَّاسِ، يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ،

فَمَنْ لَقِيَهُمْ فَلْيَقْتُلْهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ عِنْدَ اللَّهِ لِمَنْ قَتَلَهُمْ»


Almujam-Alawsat-6461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6461.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «لَنْ تَذْهَبَ الدُّنْيَا، حَتَّى يَمْلِكَ مِنْ وَلَدِكَ يَا عَمُّ فِي آخِرِ الزَّمَانِ عِنْدَ انْقِطَاعِ دَوْلَتِهِمْ، وَهُوَ الثَّامِنُ عَشَرَ، يَكُونُ مَعَهُ فِتْنَةٌ عَمْيَاءُ صَمَّاءُ، يُقْتَلُ مِنْ كُلِّ عَشْرَةِ آلَافٍ تِسْعَةُ آلَافٍ وَتِسْعُمِائَةٍ، لَا يَنْجُو مِنْهَا إِلَّا الْيَسِيرُ، وَيَكُونُ قِتَالُهُمْ بِمَوْضِعٍ مِنَ الْعِرَاقِ» قَالَ: فَبَكَى الْعَبَّاسُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يُبْكِيكَ؟ إِنَّهُمْ شِرَارُ أُمَّتِي، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَطْلُبُونَ الدُّنْيَا وَلَا يَهْتَمُّونَ الْآخِرَةَ»


Almujam-Alawsat-825

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

825.


«يُوشِكُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ قَوْمٌ يَشْرَبُونَهُ كَشُرْبِهِمُ الْمَاءَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ» ، ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى حَلْقِهِ، فَقَالَ: «لَا يُجَاوِزُ هَاهُنَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-32673

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

32673.


إِنَّ لَنَا إِطَارًا مِنَ الْمَجُوسِ وَإِنَّهُمْ يَكُونُ لَهُمُ الْعِيدُ فَيُهْدُونَ لَنَا , فَقَالَتْ: أَمَّا مَا ذُبِحَ لِذَلِكَ الْيَوْمِ فَلَا تَأْكُلُوا , وَلَكِنْ كُلُوا مِنْ أَشْجَارِهِمْ.


Musannaf-Ibn-Abi-Shaybah-24371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24371.


أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ، قَالَتْ: إِنَّ لَنَا أَطْيَارًا مِنَ الْمَجُوسِ، وَإِنَّهُ يَكُونُ لَهُمُ الْعِيدُ فَيُهْدُونَ لَنَا، فَقَالَتْ: «أَمَّا مَا ذُبِحَ لِذَلِكَ الْيَوْمِ فَلَا تَأْكُلُوا، وَلَكِنْ كُلُوا مِنْ أَشْجَارِهِمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-24372

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

24372. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.

அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் உண்ணுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)


أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ، فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ، وَالْمِهْرَجَانِ، فَكَانَ يَقُولُ لِأَهْلِهِ: «مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَكُلُوهُ، وَمَا كَانَ مِنْ غَيْرِ ذَلِكَ فَرُدُّوهُ»


Tirmidhi-2188

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

கலகம் செய்வோரின் பண்புகள்.

2188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது. அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவரான (நபியின்) வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அம்பு, வேட்டையாடிய விலங்கைத் துளைத்து வெளியேறுவதைப் போல மார்க்கத்திலிருந்து (வேகமாக) வெளியேறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), அபூஸயீத் (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

குர்ஆனை ஓதி, அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாமல், (அம்பு இலக்கிலிருந்து வெளியேறுவது போல்) மார்க்கத்திலிருந்து வெளியேறும் இந்த மக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு ஹதீஸ்களும் உள்ளன.

நிச்சயமாக இந்தச் செய்தி காரிஜிய்யா, ஹரூரிய்யா மற்றும் இவர்களைப் போன்ற பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றியே தெரிவிக்கிறது.


«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلَامِ، يَقْرَءُونَ القُرْآنَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»


Hakim-4866

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4866. ஸுலைமான் பின் அபான் என்பவர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குப் புறப்பட்டபோது, ஸஃத் பின் கைஸமா (ரலி) அவர்களும், அவரது தந்தை கைஸமா (ரலி) அவர்களும் (போரில்) கலந்துகொள்ள விரும்பினர். இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் இருவரில் ஒருவர் மட்டும் போரில் கலந்துகொள்ளலாம்; எனவே இருவரும் சீட்டுக் குலுக்கி பாருங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

அப்போது கைஸமா பின் ஹாரிஸ் (ரலி) தம் மகன் ஸஃத் (ரலி) அவர்களிடம், “நம்மில் ஒருவர் தங்கியிருக்க வேண்டியது அவசியம். எனவே, நீர் உம் குடும்பத்தாருடன் தங்கிவிடும்” என்று கூறினார். அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இது சொர்க்கம் (ஜன்னத்) அல்லாத வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தால், அதைத் தங்களுக்கு விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால், இந்தப் போரில் நான் ஷஹீதாவதை எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்.

பின்னர் அவர்கள் சீட்டுக் குலுக்கி பார்த்தனர். அதில் ஸஃத் (ரலி) அவர்களின் பெயர் வந்தது. எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றார். அங்கு, அம்ர் பின் அப்து வத் என்பவனால் ஸஃத் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ أَرَادَ سَعْدَ بْنَ خَيْثَمَةَ وَأَبُوهُ جَمِيعًا الْخُرُوجَ مَعَهُ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا فَاسْتَهَمَا» ، فَقَالَ خَيْثَمَةُ بْنُ الْحَارِثِ لِابْنِهِ سَعْدٍ: إِنَّهُ لَا بُدَّ لِأَحَدِنَا مِنْ أَنْ يُقِيمَ فَأَقِمْ مَعَ نِسَائِكَ، فَقَالَ سَعْدٌ: لَوْ كَانَ غَيْرُ الْجَنَّةِ لَآثَرْتُكَ بِهِ أَنِّي أَرْجُو الشَّهَادَةَ فِي وَجْهِي هَذَا، فَاسْتَهَمَا فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، فَقَتَلَهُ عَمْرُو بْنُ عَبْدِ وَدٍّ


Next Page »