Category: திர்மிதீ

Tirmidhi-1486

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 15

நாய்களை கொல்லுதல்.

1486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் இப்னு உமர் (ரலி), ஜாபிர் (ரலி), அபூ ராஃபிஉ (ரலி), அபூ அய்யூப் (ரலி) போன்றோர்களின் வழியாக ஹதீஸ்கள் வந்துள்ளன. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி ஹஸன், ஸஹீஹ் ஆகும். கன்னங்கரிய நாய் ஷைத்தான் என்றும் சில அறிவிப்புகளில் வந்துள்ளது. அல்கல்புல் அஸ்வதுல் பஹீம் என்ற வார்த்தைக்கு நாயின் உடலில் அறவே வெண்மையில்லாத கன்னங்கரிய நாய் என்ற பொருளாகும். மேலும் சில அறிஞர்கள் கன்னங்கரிய நாய் வேட்டையாடியவற்றை (உண்ணுவது) வெறுப்பிற்குரியது என்று கூறியுள்ளனர்.

 


«لَوْلَا أَنَّ الكِلَابَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا كُلِّهَا، فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ»


Tirmidhi-3926

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3926.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَّةَ: «مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ، وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ»


Tirmidhi-360

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

360. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை, அவன் திரும்பி வரும் வரை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் உள்ள அரிதான செய்தியாகும். மேலும் இதில் இடம்பெறும் அபூஃகாலிப் என்பவரின் பெயர் ஹஸவ்வர் என்பதாகும்.


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: العَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ


Tirmidhi-359

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

359. அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.

 

….


كَانَ يُقَالُ: ” أَشَدُّ النَّاسِ عَذَابًا اثْنَانِ: امْرَأَةٌ عَصَتْ زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ “،

قَالَ جَرِيرٌ: قَالَ مَنْصُورٌ: فَسَأَلْنَا عَنْ أَمْرِ الإِمَامِ؟ فَقِيلَ لَنَا: «إِنَّمَا عَنَى بِهَذَا الْأَئِمَّةَ الظَّلَمَةَ، فَأَمَّا مَنْ أَقَامَ السُّنَّةَ فَإِنَّمَا الإِثْمُ عَلَى مَنْ كَرِهَهُ»


Tirmidhi-2436

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி­)


«شَفَاعَتِي لِأَهْلِ الكَبَائِرِ مِنْ أُمَّتِي» قَالَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ: فَقَالَ لِي جَابِرٌ: «يَا مُحَمَّدُ مَنْ لَمْ يَكُنْ مِنْ أَهْلِ الكَبَائِرِ فَمَا لَهُ وَلِلشَّفَاعَةِ»


Tirmidhi-2435

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி­)


«شَفَاعَتِي لِأَهْلِ الكَبَائِرِ مِنْ أُمَّتِي»


Tirmidhi-1090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1090.


جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَيَّ غَدَاةَ بُنِيَ بِي، فَجَلَسَ عَلَى فِرَاشِي، كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِدُفُوفِهِنَّ، وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ، إِلَى أَنْ قَالَتْ إِحْدَاهُنَّ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْكُتِي عَنْ هَذِهِ، وَقُولِي الَّتِي كُنْتِ تَقُولِينَ قَبْلَهَا»


Tirmidhi-1514

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

குழந்தையின் காதில் (பிறந்தவுடன்) பாங்கு கூறுதல்.

1514. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்…

 


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ»


Tirmidhi-2838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

பெயரை மாற்றுதல்.

2838. நபி (ஸல்) அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ: «أَنْتِ جَمِيلَةُ»


Tirmidhi-2006

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2006.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லா செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும் ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் நள்லா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرَّجُلُ أَمُرُّ بِهِ فَلَا يَقْرِينِي وَلَا يُضَيِّفُنِي فَيَمُرُّ بِي أَفَأُجْزِيهِ؟ قَالَ: «لَا، أَقْرِهِ» قَالَ: وَرَآَّنِي رَثَّ الثِّيَابِ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ مَالٍ؟» قُلْتُ: مِنْ كُلِّ المَالِ قَدْ أَعْطَانِيَ اللَّهُ مِنَ الإِبِلِ وَالغَنَمِ، قَالَ: «فَلْيُرَ عَلَيْكَ»


Next Page » « Previous Page