Month: June 2021

Musnad-Ahmad-23544

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23544.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ فِي الرَّكْعَتَيْنِ»


Musnad-Ahmad-21646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21646. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் இப்னு முலைகா (ரஹ்) கூறினார்:

நான் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று கூறினார்.


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ؟ لَقَدْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ طُولَى الطُّولَيَيْنِ»

قَالَ: قُلْتُ لِعُرْوَةَ: مَا طُولَى الطُّولَيَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ»


Musnad-Ahmad-21633

ஹதீஸின் தரம்: More Info

21633. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் சென்ற இரவின் மஃக்ரிப் தொழுகையின் இரண்டு ரக்அத்களிலும் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுவதை கண்டேன்.

எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையின் இரண்டு ரக்அத்களிலும் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓதுவார்கள் என்று கூறினார்கள்.


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: أَلَمْ أَرَكَ اللَّيْلَةَ خَفَّفْتَ الْقِرَاءَةَ فِي سَجْدَتَيِ الْمَغْرِبِ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقْرَأُ فِيهِمَا بِطُولَى الطُّولَيَيْنِ»


Musnad-Ahmad-21609

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21609.


أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، أَوْ أَبَا أَيُّوبَ، قَالَ لِمَرْوَانَ: «أَلَمْ أَرَكَ قَصَّرْتَ سَجْدَتَيِ الْمَغْرِبِ؟ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِالْأَعْرَافِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3712. நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்” அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூ அய்யூப் (ரலி), அல்லது ஸைத் பின் ஸாபித் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3591. நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்” அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஸைத் பின் ஸாபித் (ரலி), அபூ அய்யூப் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِ الْأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ جَمِيعًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-143

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

143. நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்” அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூ அய்யூப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ»


Musannaf-Abdur-Razzaq-2691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

764. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

நான், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று கூறினார்கள்.

இப்னு ஜுரைஜ் கூறினார்:

நான் இப்னு முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல்அன்ஆம் (6 வது) அத்தியாயமும், அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும் என்று பதிலளித்தார். இதை அவர் சுயமாக கூறியதாக கருதுகிறேன்.


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ؟ وَقَدْ «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ»

قَالَ: قُلْتُ: وَمَا طُولَى الطُّولَيَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ»،

قَالَ: قُلْتُ لِابْنِ أَبِي مُلَيْكَةَ: وَمَا الطُّولَيَانِ؟ قَالَ: فَكَأَنَّهُ قَالَ: مِنْ قِبَلِ رَأْيِهِ: «الْأَنْعَامُ، وَالْأَعْرَافُ»


Kubra-Bayhaqi-4021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4021. நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘இதா ஸுல்சிலத்தில் அர்ளு ஸில்ஸாலஹா” என்ற (99 வது அத்தியாயத்தை) ஓத தாம் செவியேற்றதாக ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு நபித்தோழர் அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது வேண்டுமென்றே (அவ்வாறு ஓதினார்களா?) என்பதை நான் அறியமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

அறிவிப்பவர்: முஆத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الصُّبْحِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا فَلَا أَدْرِي أَنَسِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا


Abu-Dawood-816

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

816. நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘இதா ஸுல்சிலத்தில் அர்ளு ஸில்ஸாலஹா” என்ற (99 வது அத்தியாயத்தை) ஓத தாம் செவியேற்றதாக ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு நபித்தோழர் அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது வேண்டுமென்றே (அவ்வாறு) ஓதினார்களா? என்பதை நான் அறியமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

அறிவிப்பவர்: முஆத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِي الصُّبْحِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا» فَلَا أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا


Next Page » « Previous Page