தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6737

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

(இறந்தவருக்குத்) தந்தையும் சகோதரர்களும் இருக்கும் போது பாட்டனாருக்குரிய சொத்துரிமை.17

அபூபக்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) ஆகியோர் பாட்டனார் தந்தை(யைப் போன்றவர்) ஆவார் என்று கூறினர். (அதற்கு ஆதாரமாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆதமின் மக்களே! எனும் (7:26ஆவது) வசனத் தொடரையும் நான் என் தந்தையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் (என்று யூசுஃப் கூறினார்) எனும் (12:38ஆவது) வசனத் தொடரையும் ஓதினார்கள்.18

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் நிறைந்திருந்தும் அவர்களில் யாரும் அபூபக்ர் (ரலி) அவர்களு(டைய இக்கருத்துக்)க்கு மாறுபடவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு (மகன் இல்லாத போது) என் மகனுடைய மகன் (பேரன்)தான் வாரிசாவானே தவிர சகோதரர்கள் அல்லர். (அப்படியிருக்கும் போது) என் பேரனுக்கு (அவனுடைய தந்தை இல்லாத போது பாட்டனாகிய) நான் ஏன் வாரிசாக முடியாது?19

(இது தொடர்பாக) உமர் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரிடமிருந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.20

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.21

Book : 86

(புகாரி: 6737)

بَابُ مِيرَاثِ الجَدِّ مَعَ الأَبِ وَالإِخْوَةِ
وَقَالَ أَبُو بَكْرٍ، وَابْنُ عَبَّاسٍ، وَابْنُ الزُّبَيْرِ: «الجَدُّ أَبٌ» وَقَرَأَ ابْنُ عَبَّاسٍ: {يَا بَنِي آدَمَ} [الأعراف: 26] {وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ} «وَلَمْ يُذْكَرْ أَنَّ أَحَدًا خَالَفَ أَبَا بَكْرٍ فِي زَمَانِهِ، وَأَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَافِرُونَ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ [ص:152]: «يَرِثُنِي ابْنُ ابْنِي دُونَ إِخْوَتِي، وَلاَ أَرِثُ أَنَا ابْنَ ابْنِي؟» وَيُذْكَرُ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَابْنِ مَسْعُودٍ، وَزَيْدٍ، أَقَاوِيلُ مُخْتَلِفَةٌ.

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أَلْحِقُوا الفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.