தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7253

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, ‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’ என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், ‘அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்’ என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11

Book :95

(புகாரி: 7253)

حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ الأَنْصَارِيَّ، وَأَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ – وَهُوَ تَمْرٌ -»، فَجَاءَهُمْ آتٍ فَقَالَ: إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أَنَسُ، قُمْ إِلَى هَذِهِ الجِرَارِ فَاكْسِرْهَا، قَالَ أَنَسٌ: «فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى انْكَسَرَتْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.