தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-665

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதர் சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்று தொடங்கும் 87ஆவது) அத்தியாயத்தை ஓதலானார். தொழுகையை முடித்துத் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் (எனக்குப் பின்னால் நின்று சப்தமாக) ஓதியவர் யார்? அல்லது உங்களில் ஓதிக்கொண்டிருந்தவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நான்தான் (ஓதினேன்) என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,உங்களில் சிலர் (எனக்குப் பின்னால் சப்தமிட்டு) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் அவர் தகராறு செய்வதாக எண்ணி விட்டேன். (எனவே, உங்களில் யாரும் எனக்குப் பின்னால் நின்று சப்தமாக ஓத வேண்டாம்) என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 4

(முஸ்லிம்: 665)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ، فَجَعَلَ رَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «أَيُّكُمْ قَرَأَ» – أَوْ أَيُّكُمُ الْقَارِئُ – فَقَالَ رَجُلٌ أَنَا، فَقَالَ: «قَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا»


Tamil-665
Shamila-398
JawamiulKalim-609




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.