தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2069

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்” எனும் குறிப்பு ஹதீஸின் ஆரம்பத்தில் இடம்பெறவில்லை. ஹதீஸின் இறுதியில் “(ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. எனவே,நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; நாடியவர் அதை விட்டுவிட்டனர்” என்றே இடம்பெற்றுள்ளது. (“நாடியவர் நோற்கலாம்;நாடியவர் விட்டு விடலாம்” என) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இல்லை.

– ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்கப் பட்டுவந்தது. இஸ்லாம் வந்தபோது விரும்பியவர் அந்த நோன்பை நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டனர்.

Book : 13

(முஸ்லிம்: 2069)

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ بِهَذَا الْإِسْنَادِ، وَلَمْ يَذْكُرْ فِي أَوَّلِ الْحَدِيثِ، وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ، وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ

وَتَرَكَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ، وَلَمْ يَجْعَلْهُ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَرِوَايَةِ جَرِيرٍ

– حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: «أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ»


Tamil-2069
Shamila-1125
JawamiulKalim-1904




மேலும் பார்க்க : புகாரி-1592 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.