தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-641

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

ஒருவர் நாம் தொழவில்லை’ என்று சொல்லலாம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

கந்தக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) வந்து ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் (அஸர்) தொழவில்லை’ என்றார்கள். நோன்பு வைத்திருந்தவர்கள் நோன்பு துறந்த பின் இது நடந்தது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் தொழவில்லை’ என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ என்ற இடத்திற்குச் சென்றார்கள். உளூச் செய்து அஸர் தொழுதார்கள். அதன் பிறகு மஃரிபு தொழுதார்கள்.
Book : 10

(புகாரி: 641)

بَابُ قَوْلِ الرَّجُلِ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا صَلَّيْنَا

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ عُمَرُ بْنُ الخَطَّابِ يَوْمَ الخَنْدَقِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ: مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا صَلَّيْتُهَا» فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ، فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى – يَعْنِي العَصْرَ – بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ





மேலும் பார்க்க : புகாரி-596 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.