தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4532

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் (தம் அடிமையை) “அப்தீ” என்று கூற வேண்டாம். உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை(அப்து)களே! மாறாக, “ஃபத்தாய” (என் பணியாளரே) என்று அழைக்கட்டும். அடிமை தன் (உரிமையாளரை) “ரப்பீ” (என் அதிபதியே!) என்று சொல்ல வேண்டாம். மாறாக, “சய்யிதீ” (என் தலைவரே!) என்று அழைக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் அபூமுஆவியா (ரஹ்), அஃமஷ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “அடிமை தன் உரிமையாளரை “மவ்லாய” (எசமானே!) என்று அழைக்க வேண்டாம்” என்று காணப்படுகிறது.

அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஏனெனில், அல்லாஹ்வே உங்கள் “மவ்லா” (எசமான்) ஆவான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 40

(முஸ்லிம்: 4532)

وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: عَبْدِي، فَكُلُّكُمْ عَبِيدُ اللهِ، وَلَكِنْ لِيَقُلْ: فَتَايَ، وَلَا يَقُلِ الْعَبْدُ: رَبِّي، وَلَكِنْ لِيَقُلْ: سَيِّدِي

– وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، كِلَاهُمَا عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ، وَفِي حَدِيثِهِمَا وَلَا يَقُلِ الْعَبْدُ لِسَيِّدِهِ مَوْلَايَ وَزَادَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ فَإِنَّ مَوْلَاكُمُ اللهُ عَزَّ وَجَلَّ


Tamil-4532
Shamila-2249
JawamiulKalim-4185




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.