தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-786

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 116 சஜ்தாவின்போதும் தக்பீரை முழுமையாகக் கூறுவது. 

 முதர்ரிஃப் அறிவித்தார்.

நானும் இம்ரான் இப்னு ஹுஸைனும் அலீ(ரலி)யைப் பின் பற்றித் தொழுதோம். அலீ(ரலி) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டு ரக்அத்தை முடித்து எழும்போதும் தக்பீர் சொன்னார்கள். தொழுகையை முடித்த பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டு ‘இவர் நபி(ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவு படுத்திவிட்டார்’ என்று இம்ரான்(ரலி) குறிப்பிட்டார்கள்.
Book : 10

(புகாரி: 786)

بَابُ إِتْمَامِ التَّكْبِيرِ فِي السُّجُودِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ

صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، «فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ»، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، فَقَالَ: قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ: لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.