தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1280

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 ஜைனப்(ரலி) அறிவித்தார்.

சுப்யான்(ரலி) அவர்களின் மரணச் செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரின் மகள்) உம்மு ஹபீபா(ரலி) மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தம் கன்னங்களிலும் முழங்கைகளிலும் தடவினார்கள்.

மேலும், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தன்னுடைய கணவன் இறந்தாலே தவிர வேறு யார் இறந்தாலும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதமும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டிராவிட்டால் (இந்த வாசனைத் திரவியமான)து எனக்குத் தேவையற்றதுதான்’ எனக் கூறினார்.
Book :23

(புகாரி: 1280)

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، قَالَتْ

لَمَّا جَاءَ نَعْيُ أَبِي سُفْيَانَ مِنَ الشَّأْمِ، دَعَتْ أُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِصُفْرَةٍ فِي اليَوْمِ الثَّالِثِ، فَمَسَحَتْ عَارِضَيْهَا، وَذِرَاعَيْهَا، وَقَالَتْ: إِنِّي كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً، لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ، أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.