தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-325

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் மக்காவிற்கு போகும் வழியில் நானும் இருந்தேன். அதுசமயம் வானத்தை மேகம் மூடியது. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு நேரம் வந்து விடுமோ என எண்ணி, ஒரு ரக்அத் வித்ருத் தொழுதார்கள். பின்பு மேகம் விலகியதும் இது இரவு நேரம் தான். (இன்னும் சுப்ஹு வரவில்லை) என அறிந்தார்கள். உடனே இன்னுமொரு ரக்அத் தொழுது (முந்தி தொழுத ஒரு ரக்அத்தை) இரண்டாக்கினார்கள். பின்பு அதற்குப் பிறகு இரண்டு, இரண்டு ரக்அத்களாக தொழுதார்கள். அதன் பின் சுப்ஹு நேரம் வந்து விடும் என எண்ணி, ஒரு ரக்அத் வித்ருத் தொழுதார்கள் என நாபிஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 325)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ أَنَّهُ قَالَ

كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِمَكَّةَ وَالسَّمَاءُ مُغِيمَةٌ، فَخَشِيَ عَبْدُ اللَّهِ الصُّبْحَ، «فَأَوْتَرَ بِوَاحِدَةٍ، ثُمَّ انْكَشَفَ الْغَيْمُ، فَرَأَى أَنَّ عَلَيْهِ لَيْلًا فَشَفَعَ بِوَاحِدَةٍ، ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، فَلَمَّا خَشِيَ الصُّبْحَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Tamil-271.
Shamila-325.
JawamiulKalim-




மேலும் பார்க்க: புகாரி-472 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.