தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-62

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 32

உளூ இருக்க உளூ செய்தல்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது லுஹர் தொழுகைக்கு பாங்கு ‎சொல்லப்பட்டதும் அவர்கள் உலூச் செய்து தொழுதார்கள். அஸர் தொழுகைக்கு ‎பாங்கு சொல்லப்பட்டதும் அவர்கள் உலூச் செய்தார்கள். அப்போது நான் (உலூச் ‎செய்வதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் யார் ‎உலூவுடன் இருக்க மீண்டும் உலூச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து ‎நன்மைகளை எழுதி விடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள் என அப்துல் லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்கள். இதை குதைஃப் ‎அறிவிக் கிறார். முஸத்தத் அவர்களின் இந்த ஹதீஸ் பூரணமானது என இமாம் ‎அபூதாவூது குறிப்பிடுகிறார்கள். ‎

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னு மாஜா ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது. ‎இமாம் திர்மிதீ அவர்கள் இதை பலவீனமான ஹதீஸ் என குறிப்பிடுகிறார்கள். ‎ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் பின் ‎ஸியாத் அல் அப்ஃரீகீ பலவீனமானவர். மேலும் இவர் தத்லீஸ் செய்பவரும் ஆவார்.‎

தத்லீஸ் என்பவர், ஒரு அறிவிப்பாளர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரிடம் எதையும் ‎செயியுறாமல் அவரது பெயரை பயன் படுத்துவதாகும்.‎

(அபூதாவூத்: 62)

32- بَابُ الرَّجُلِ يُجَدِّدُ الْوُضُوءَ مِنْ غَيْرِ حَدَثٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَ أَبُو دَاوُدَ: وَأَنَا لِحَدِيثِ ابْنِ يَحْيَى أَتْقَنُ عَنْ غُطَيْفٍ، وَقَالَ مُحَمَّدٌ: عَنْ أَبِي غُطَيْفٍ الْهُذَلِيِّ، قَالَ

كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، فَلَمَّا نُودِيَ بِالظُّهْرِ تَوَضَّأَ فَصَلَّى، فَلَمَّا نُودِيَ بِالْعَصْرِ تَوَضَّأَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ عَشْرَ حَسَنَاتٍ»،

قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا حَدِيثُ مُسَدَّدٍ وَهُوَ أَتَمُّ


AbuDawood-Tamil-62.
AbuDawood-Shamila-62.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.