தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1608

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற இரு மூலைகளை தொடாதிருத்தல். 

 அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (தொடாமல்) தவிர்க்க முடியும்?

முஆவியா(ரலி) எல்லா மூலைகளையும் தொடுபவராக இருந்தார்கள்’ என்று அபூ ஷஅஸா கூறினார்.

முஆவியா(ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), ‘(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரண்டு மூலைகளை தொடக் கூடாது’ என்றார்கள்.

அதற்கு அபூ ஷஅஸா ‘இந்த ஆலயத்தில் தொட தடுக்கப்பட்ட பகுதி ஏதுமில்லை’ என்றார். இப்னுஸ் ஸுபைர்(ரலி) எல்லா மூலைகளையும் தொடுவார்கள்.
Book : 25

(புகாரி: 1608)

بَابُ مَنْ لَمْ يَسْتَلِمْ إِلَّا الرُّكْنَيْنِ اليَمَانِيَيْنِ

وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ أَنَّهُ قَالَ

«وَمَنْ يَتَّقِي شَيْئًا مِنَ البَيْتِ؟» وَكَانَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الأَرْكَانَ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: إِنَّهُ لاَ يُسْتَلَمُ هَذَانِ الرُّكْنَانِ، فَقَالَ: «لَيْسَ شَيْءٌ مِنَ البَيْتِ مَهْجُورًا» وَكَانَ ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يَسْتَلِمُهُنَّ كُلَّهُنَّ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.