தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2884

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 உடலில் இருந்து அம்பைப் பிடுங்கி எடுப்பது.

 அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதரர் அபூ ஆமிர்(ரலி) அவர்களின் முழங்காலருகில் அம்பு துளைத்து (அதிலேயே தங்கி) விட்டிருந்தது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), ‘இந்த அம்பைப் பிடுங்கி விடு’ என்று கூறினார்கள்.

நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து தண்ணீர் கொட்டியது. பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! உபைத் அபூ அமீருக்கு மன்னிப்பளி’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 56

(புகாரி: 2884)

بَابُ نَزْعِ السَّهْمِ مِنَ البَدَنِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

رُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ، فَانْتَهَيْتُ إِلَيْهِ، قَالَ: انْزِعْ هَذَا السَّهْمَ، فَنَزَعْتُهُ فَنَزَا مِنْهُ المَاءُ، فَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.