தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-10748

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு தவணை வழங்குகின்றார் எனில், “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு.

கடன் தவணை முடிந்தும் அவகாசம் அளித்தால் (கூடுதல்) தவணை தரும் நாள் வரை அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(shuabul-iman-10748: 10748)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، ثَنَا ابْنُ أَبِي قَمَّاشٍ، ثَنَا أَبُو مَعْمَرٍ، ثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ مَا لَمْ يَحِلُّ، فَإِذَا حَلَّ الدَّيْنُ، فَإِنْ أَنْظَرَهُ بَعْدَ الْحِلِّ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10748.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10497.




இந்த ஹதீஸில் கடனாளிக்கு தவணை முடிந்த பின் கூடுதல் அவகாசம் அளித்தால் ஒரு மடங்கு தர்மம் செய்த நன்மை என்று இருந்தாலும் அஹ்மத்-23046 இல் வரும் செய்தியே சரியான செய்தி.

பார்க்க : முஸ்னத் அஹ்மத்-23046 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.